search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரத்தகாயம்"

    • சென்னையில் கூலி வேலை செய்து வந்த மாயக்கண்ணன், யமுனாவை கடந்த 22-ந்தேதி செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயன்றார்.
    • இது குறித்து யமுனாவின் தந்தை மாயக்கண்ணன் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மாயக்கண்ணன் மகள் யமுனா (வயது 20). இவருக்கும் பெரிய சிறுவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வைரவேல் (27) என்பவருக்கும் கடந்த ஒன்னரை வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று. இவர்கள் பெரிய சிறுவத்தூர் கிராமத்தில் வசித்து வருகின்றனர். வைரவேல் சேலம் மாவட்டம் தலைவாசலில் வெல்டிங் வேலை செய்து வருவதால் வாரம் ஒருமுறை வீட்டிற்கு வந்து செல்வார். இந்நிலையில் சென்னையில் கூலி வேலை செய்து வந்த மாயக்கண்ணன், யமுனாவை கடந்த 22-ந்தேதி செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயன்றார். அவர் போனை எடுக்காததால், வைரவேலை தொடர்பு கொண்டு பேசினார். நான் விடுமுறையில் வீட்டிற்கு சென்று கொண்டிருக்கிறேன். அங்கு சென்றவுடன் உங்களுக்கு போன் செய்கிறேன் என்று வைரவேல் கூறியுள்ளார்.

    நேற்று காலை வீட்டிற்கு சென்று வைரவேல் பார்த்த பொழுது, கதவின் உட்புறம் பூட்டப்பட்டிருந்தது. கதவை பலமுறை தட்டியும் திறக்காததால் சந்தேகம் அடைந்த வைரவேல், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றார். அங்கு பார்த்த பொழுது யமுனா ரத்தகாயங்களுடன் இறந்து கிடந்தார். அதிர்ச்சியடைந்த வைரவேல், இது குறித்து யமுனாவின் தந்தை மாயக்கண்ணன் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த சின்னசேலம் போலீசார் யமுனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், யமுனாவை யாரேனும் கொலை செய்தனரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து சின்னசேலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான ஒன்னரை வருடத்தில் இளம்பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், சோக த்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    ×