search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோர்பி பாலம் விபத்து"

    • இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் 10 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளளனர்.
    • ஜெய்சுக் படேலை கைது செய்ய கடந்த வாரம் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

    குஜராத் மாநிலம் மோர்பி என்ற இடத்தில் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த மிக பழமையான தொங்கு பாலம் கடந்த அக்டோபர் மாதம் திடீரென இடிந்து விழுந்தது. பாலம் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்ட 4 நாளில் இந்த பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில், 135 பேர் உயிரிழந்தனர்.

    இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், 10 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளளனர். தொங்கு பாலத்தை பழுதுபார்த்து புதுப்பித்து, பராமரிக்கும் பணியை மேற்கொண்டு வரும் ஒரேவா நிறுவனத்தின் நிர்வாக இயக்குர் ஜெய்சுக் பட்டேல் பெயர் பிரதான குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளது. அவர் தலைமறைவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    ஜெய்சுக் படேலை கைது செய்ய கடந்த வாரம் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது. கைது செய்வதை தவிர்க்க, முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். தற்போது குற்றப்பத்திரிகையில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டதையடுத்து, ஜெய்சுக் பட்டேல் இன்று நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை முடிவு செய்துள்ளது.

    இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 10வது நபர் ஜெய்சுக் படேல் ஆவார். முன்னதாக கைது செய்யப்பட்டவர்களில் துணை ஒப்பந்ததாரர்கள், தினக்கூலி தொழிலாளர்கள் மற்றும் பாதுகாவலர்கள் அடங்குவர்.

    • காயமடைந்தவர்களுக்கு மோர்பி நகர மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • மிகப்பெரிய ஊழலால் தொங்கு பால விபத்து நிகழ்ந்துள்ளதாக கெஜ்ரிவால் குற்றச்சாட்டு.

    ஆமதாபாத்:

    குஜராத்தின் மோர்பி மாவட்டத்தில் உள்ள மச்சு ஆற்றின் மீது கட்டப்பட்டிருந்த கேபிள் தொங்கு பாலம் கடந்த 30-ந்தேதி திடீரென இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என 141-பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டனர். காயமடைந்தவர்களுக்கு மோர்பி நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் குஜராத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி இன்று அந்த மருத்துவமனைக்கு நேரில் சென்று காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். முன்னதாக விபத்து நடந்த இடத்தை அவர் ஆய்வு செய்ததாக தகவல்கள் வெளியாகின.

    தொங்கு பாலத்தை புனரமைக்கும் ஒப்பந்தம் ஒரேவா என்ற தனியார் நிறுவனத்திடம் வழங்கப்பட்டு இருந்தது. அந்த நிறுவனம் கடந்த 7 மாதங்களாக பாலத்தை புனரமைக்கும் பணியில் ஈடுபட்டது. கடந்த வாரம் அப்பாலம் மீண்டும் திறக்கப்பட்டு இருந்தாலும் பாலத்துக்கான மாநகராட்சி தர சான்றிதழை அந்த நிறுவனம் பெறவில்லை.

    சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அதிகாரிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விபத்து தொடர்பாக ஒரேவா நிறுவனத்தின் மேலாளர் இருவர் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தக் கோரிய பொதுநல மனுவை, வரும் 14-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், மோர்பி தொங்கு பாலத்தில் ஏற்பட்ட விபத்து, மிகப்பெரிய ஊழலால் நிகழ்ந்தது என்று, ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டி உள்ளார். பாலத்தை சீரமைப்பதில் எந்த அனுபவமும் இல்லாத, நிறுவனத்திடம், ஏன் ஒப்பந்த பணிகள் வழங்கப்பட்டது, குஜராத் அரசுக்கு வேண்டியவர்களுக்கு இந்த பணிகள் வழங்கப்பட்டுள்ளதா? என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

    • சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு பொதுநல மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.
    • வருகிற 14-ந்தேதி விசாரணை நடைபெறும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    குஜராத் மாநிலம் மோர்பி பகுதியில் தொங்கு பாலம் அறுந்து விழுந்த விபத்தில் 141 பேர் பலியானார்கள்.

    இந்த விபத்து குறித்து ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்றும், நாட்டில் உள்ள பழமை வாய்ந்த பாலங்களை தணிக்கை செய்யக் கோரியும் வக்கீல் விஷால் திவாரி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

    சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு பொதுநல மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.

    வருகிற 14-ந்தேதி விசாரணை நடைபெறும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது.

    ×