search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேல்மலையனூர் ஊஞ்சல் உற்சவம்"

    விழுப்புரம் மாவடடம் மேல்மலையனூரில் அமைந்துள்ள அங்காளம்மன் கோவிலில் கார்த்திகை மாத அமாவாசை விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    விழுப்புரம் மாவடடம் மேல்மலையனூரில் அமைந்துள்ள அங்காளம்மன் கோவிலில் மாதந்தோறும் அமாவாசை விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி கார்த்திகை மாத அமாவாசை விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அதிகாலை கோவில் நடைதிறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், குங்குமம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவச அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.

    உற்சவ அம்மனுக்கு அன்னபூரணி அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் வைக்கப்பட்டிருந்தது. இரவு 11.30 மணியளவில் அங்கிருந்த அம்மனை பம்பை, மேளதாளம் முழங்க வடக்கு வாயில் வழியாக கொண்டு சென்று ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சலில் அமர்த்தினர். பின்பு பூசாரிகள் அம்மன் பக்திப் பாடல்கள் பாடியவுடன் ஊஞ்சலில் அமர்ந்திருந்த அம்மன் முன்னும் பின்னும் அசைந்தாடி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு 12.30 மணிக்கு அம்மனுக்கு அர்ச்சனை செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.



    நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

    விழாவை முன்னிட்டு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், சேலம், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரியில் இருந்தும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    விழாவுக்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ், அறங்காவலர் குழு தலைவர் கணேசன் பூசாரி, அறங்காவலர்கள் ஏழுமலை, ரமேஷ், செல்வம், சரவணன், மணி, சேகர், ஆய்வாளர் அன்பழகன், கண்காணிப்பாளர் வேலு மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    மேல்மலையனூரில் உள்ள அங்காளம்மன் கோவிலில் இந்த மாத ஆடி அமாவாசை விழா நேற்று இரவு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள அங்காளம்மன் கோவிலில் மாதந்தோறும் அமாவாசை விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த மாத ஆடி அமாவாசை விழா நேற்று இரவு நடந்தது.

    அமாவாசைகளில் ஆடி அமாவாசை மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதனால் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு பக்தர்களின் வருகை வழக்கத்தை விட அதிகளவில் இருந்தது.

    விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு மூலஸ்தானத்தில் உள்ள அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், குங்குமம், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தங்க கவச அலங்காரத்தில் அம் மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    அதனை தொடர்ந்து உற்சவ அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் வைக்கப்பட்டது. தொடர்ந்து இரவு 11.40 மணிக்கு அங்கிருந்து உற்சவ அம்மனை பம்பை, மேளதாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக கொண்டு செல்லப்பட்டு ஊஞ்சல் மண்டபத்தில் உள்ள ஊஞ்சலில் வைத்து ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அப்போது பூசாரிகள் பக்திப்பாடல்களை பாடினார்கள்.



    நள்ளிரவு 12.45 மணியளவில் அம்மனுக்கு அர்ச்சனையும், அதனை தொடர்ந்து தீபாராதனையும் நடந்தது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரி சனம் செய்தனர்.

    விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக்கழகம் சார்பில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், சேலம், விழுப்புரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.

    விழாவுக்கான ஏற் பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ், அறங்காவலர் குழு தலைவர் கணேசன், அறங்காவலர்கள் ஏழுமலை, ரமேஷ், செல்வம், சரவணன், மணி, சேகர், கண்காணிப்பாளர் வேலு, ஆய்வாளர் அன்பழகன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள பிரசித்திபெற்ற அங்காளம்மன் கோவிலில் மாதந்தோறும் அமாவாசை அன்று ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி ஆனி மாத அமாவாசையான நேற்று முன்தினம் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து உற்சவ அம்மனுக்கு வைஷ்ணவி அலங்காரம் செய்யப்பட்டது.

    இரவு 11.40 மணிக்கு உட்பிரகாரத்தில் வைக்கப்பட்டிருந்த உற்சவ அம்மன் பம்பை மேள தாளம் முழங்க வடக்கு வாயில் வழியாக ஊஞ்சல் மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டார். தொடர்ந்து அங்கிருந்த ஊஞ்சலில் அம்மன் எழுந்தருளினார்.

    பின்னர் பூசாரிகள் தாலாட்டு பாடல்கள் பாட அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. அப்போது அம்மன் ஊஞ்சலில் முன்னும், பின்னும் அசைந்தாடியபடி பக்தர்களுக்கு அருள்பாலிக்க மகா தீபாராதனை நடைபெற்றது. அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பியவாறு சாமி தரிசனம் செய்தனர். இரவு 12.45 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நிறைவு பெற்றது.

    இதற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் மேல்மலையனூர் பிரகாஷ், விழுப்புரம் ஜோதி, அறங்காவலர்குழு தலைவர் ரமேஷ் பூசாரி, அறங்காவலர்கள் ஏழுமலை, கணேசன், செல்வம், சரவணன், மணி, சேகர், கண்காணிப்பாளர் வேலு, ஆய்வாளர் அன்பழகன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் ப ாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    முன்னதாக பக்தர்களின் வசதிக்காக அரசு போக்கு வரத்துக்கழகம் சார்பில் விழுப்புரம், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர், திருவண்ணாமலை, சேலம், கடலூர் மற்றும் புதுச்சேரியில் இருந்தும் மேல்மலையனூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. 
    ×