search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முந்திரி சாகுபடி"

    • முந்திரி கொட்டையை பிரித்து எடுத்து விற்பனை செய்யும் பணிகள் துவங்கியுள்ளது.
    • பழம் 1 கிலோ 20 ரூபாய்க்கும், கொட்டை 400 ரூபாய்க்கும் விற்பனை செய்து வருகிறார்கள்.

    மாமல்லபுரம்:

    பழத்தின் வெளியே விதை கொண்ட ஒரே பழமான முந்திரி பழம், தமிழ் நாட்டில் அரியலூர், கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது இதன் சீசன் துவங்கி பழங்களை பறித்து, அதிலிருந்து கொட்டையை பிரித்து எடுத்து விற்பனை செய்யும் பணிகள் துவங்கியுள்ளது.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் முந்திரி காடுகள் கிழக்கு கடற்கரை சாலையில் அதிகளவில் இருந்தது. காலப்போக்கில் அவை மனை பிரிவுகளாகவும், பண்ணை வீடுகளாகவும் மாறியதால் பெரும்பாலான முந்திரி காடுகள் அழிந்தன. ஒரு சில பகுதிகளில் மட்டும் முந்திரி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    தற்போது மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி, திருவிடந்தை, வடநெம்மேலி கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் குறைந்த அளவில் காணப்படும் முந்திரி காடுகளில் அறுவடை பருவம் துவங்கியதால் விவசாயிகள் பழங்களை பறித்து, பழம் 1 கிலோ 20 ரூபாய்க்கும், கொட்டை 400 ரூபாய்க்கும் விற்பனை செய்து வருகிறார்கள்.

    • வேட்டங்குடி பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் முந்திரி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
    • முந்திரி சாகுபடி செய்யப்பட்டுள்ள வயலில் ஓஎன்ஜிசி நிறுவன ஊழியர்கள் வந்து குழாய் பதிப்பதற்காக முந்திரி மரங்களை வெட்டி அகற்றியுள்ளனர்.

    சீர்காழி, ஜூன்.22-

    மயிலாடுதுறை மாவ ட்டம் சீர்காழி அருகே பழையபாளையம் கிராமத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் இயங்கிவருகிறது. இங்கிருந்து செம்பனா ர்கோயில் பகுதியில் உள்ள மேமாத்தூர் என்ற இடத்துக்கு குழாய் மூலம் எரிவாயு எடுத்துச் செல்வதற்காக குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வேட்டங்குடி கிராமத்தில் முந்திரி சாகுபடி செய்யப்பட்டுள்ள வயலில் ஓஎன்ஜிசி நிறுவன ஊழியர்கள் வந்து குழாய் பதிப்பதற்காக முந்திரி மரங்களை வெட்டி அகற்றியுள்ளனர்.

    இதுகுறித்து மயிலாடு துறை மாவட்ட நஞ்சை புஞ்சை விவசாய சங்கத் தலைவர் வில்வநாதன் கூறுகையில், வேட்டங்குடி பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் முந்திரி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.இது விவசாயிகளுக்கு ஓரளவுக்கு பயன் அளித்துக் கொண்டிருக்கிறது. இதனை நம்பி விவசாயிகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இந்நிலையில் ஓஎன்ஜிசி நிறுவனம் சார்பில் குழாய் பதிப்பதற்காக திடீரென வேட்டங்குடி கிராமத்தில் முந்திரி தோட்டத்துக்குள் சில ஊழியர்கள் புகுந்து முந்திரி மரக் கிளைகளை வெட்டி அகற்றியுளளனர்.இது வன்மையாக கண்டி க்க த்தக்கது.இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்

    எனவே, விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் அத்துமீறி இது போன்ற செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பவுள்ளதாகவும் தெரிவித்தார்.

    ×