என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் முந்திரி சீசன் துவங்கியது
- முந்திரி கொட்டையை பிரித்து எடுத்து விற்பனை செய்யும் பணிகள் துவங்கியுள்ளது.
- பழம் 1 கிலோ 20 ரூபாய்க்கும், கொட்டை 400 ரூபாய்க்கும் விற்பனை செய்து வருகிறார்கள்.
மாமல்லபுரம்:
பழத்தின் வெளியே விதை கொண்ட ஒரே பழமான முந்திரி பழம், தமிழ் நாட்டில் அரியலூர், கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது இதன் சீசன் துவங்கி பழங்களை பறித்து, அதிலிருந்து கொட்டையை பிரித்து எடுத்து விற்பனை செய்யும் பணிகள் துவங்கியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் முந்திரி காடுகள் கிழக்கு கடற்கரை சாலையில் அதிகளவில் இருந்தது. காலப்போக்கில் அவை மனை பிரிவுகளாகவும், பண்ணை வீடுகளாகவும் மாறியதால் பெரும்பாலான முந்திரி காடுகள் அழிந்தன. ஒரு சில பகுதிகளில் மட்டும் முந்திரி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
தற்போது மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி, திருவிடந்தை, வடநெம்மேலி கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் குறைந்த அளவில் காணப்படும் முந்திரி காடுகளில் அறுவடை பருவம் துவங்கியதால் விவசாயிகள் பழங்களை பறித்து, பழம் 1 கிலோ 20 ரூபாய்க்கும், கொட்டை 400 ரூபாய்க்கும் விற்பனை செய்து வருகிறார்கள்.






