search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதல்மந்திரி"

    கேரள மாநிலத்தில் பெய்துவரும் அதிகப்படியான கனமழை காரணமாக இதுவரை 324 பேர் உயிரிழந்துள்ளதாக கேரள முதல்மந்திரி பிணராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். #KeralaRains #RainKills #KeralaFlood #StandWithKerala
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த மழை காரணமாக பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கி, சூனியமாக காட்சியளிக்கிறது. மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் கேரளாவில் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    கேரளாவில் ஏற்பட்டுள்ள இந்த இயற்கை சீற்றத்தில் இருந்து மீட்க, மத்திய அரசு உட்பட பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

    இந்நிலையில், கேரள முதல்மந்திரி தனது ட்விட்டர் பக்கத்தில், மழை பாதிப்பால் இதுவரை 324 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், 100 வருடங்களில் இல்லாத இந்த மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்து வருவதாகவும் பிணராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.



    கேரள மழை வெள்ளத்தில் இருந்து மக்களை பாதுகாக்க இதுவரை  ஆயிரத்து 500 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 2 லட்சத்து 23 ஆயிரத்து 139 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் கேரள முதல்மந்திரி பிணராயி விஜயன் வெளியிட்டுள்ள ட்விட்டர் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த மழை வெள்ளத்தில் இருந்து மக்களையும் கேரளாவையும் மீட்டெடுக்க உதவ donation.cmdrf.kerala.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்துமாறும் பிணராயி விஜயன் கேட்டுக் கொண்டுள்ளார். #KeralaRains #RainKills #KeralaFlood #StandWithKerala
    டெல்லியில் ரேஷன் பொருட்களை வீடுகளுக்கு சென்று வழங்கும் திட்டத்தை அமல்படுத்த முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். #AravindKejriwal
    புதுடெல்லி:

    டெல்லியில் வீடுகளுக்கு ரேஷன் பொருட்களை வினியோகிக்கும் திட்டத்தை அம்மாநில அரசு கடந்த மார்ச் மாதம் அறிவித்து இருந்தது. அதன்படி, வீடுகளுக்கு ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் திட்டத்தை அமல்படுத்த டெல்லி முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று உத்தரவிட்டுள்ளார்.

    இந்த திட்டத்தை உடனடியாக அமல்படுத்துமாறு டெல்லி உணவுத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாநிலத்தின் அதிகாரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் இந்த உத்தரவை பிறப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது. #AravindKejriwal
    உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்க நிதி உதவி கேட்டு பிரதமர் மோடி, முதல்மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் எழுதிய இளம் வீராங்கனைக்கு ரூ.4.5 லட்சம் நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. #ISSFJuniorWorldCup #FundForIndianPlayer
    மீரட்:

    சர்வதேச துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பு (ஐ.எஸ்.எஸ்.எப்) சார்பில் ஜெர்மனியின் சுகல் நகரில் வரும் 22-ம் தேதி ஜூனியர் உலகக் கோப்பை போட்டி தொடங்க உள்ளது. இதில் இந்தியா சார்பில் பங்கேற்பதற்கு, உத்தர பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்த பிரியா சிங் (வயது 19) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    ஆனால், உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்று இந்தியாவிற்கு பெருமை சேர்க்க காத்திருக்கும் பிரியா சிங்கின் குடும்பம் ஏழ்மை நிலையில் இருப்பதால், அவரால் ஜெர்மனி சென்று தங்கியிருந்து போட்டியில் பங்கேற்க முடியாத நிலை உள்ளது. அங்கு செல்வதற்கு லட்சக் கணக்கில் செலவு ஆகும் என்பதால் அவரது குடும்பத்தினர் என்ன செய்வது என்று தெரியாமல் தவிப்பில் உள்ளனர்.

    எனவே, ஜெர்மனி சென்று திரும்புவதற்கான பயணச் செலவு மற்றும் அங்கு தங்குவதற்கு தேவையான நிதி உதவி கேட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரியா சிங் கடிதம் அனுப்பி இருந்தார்.

    தாம் விளையாட்டு போட்டியில் பங்கேற்க மிகவும் ஆர்வமாக உள்ளதாகவும், என் தந்தை கூலித்தொழிலாளி என்பதால் அங்கு சென்று போட்டியில் பங்கேற்பதற்கான பண உதவியை கேட்டு முதல்மந்திரி மற்றும் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த கடிதம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முதல்மந்திரி யோகி ஆதித்யநாத், துப்பாக்கிச்சூடு வீராங்கனை பிரியா சிங் ஜெர்மனி சென்று போட்டியில் பங்கேற்பதற்காக உ.பி அரசு சார்பில் 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும், அவரது பயணத்துக்கான செலவில் ஒரு பகுதியினை மாவட்ட நிர்வாகம் செய்துதரும் எனவும் கூறியுள்ளார்.


    பிரியா சிங்கின் சகோதரர்

    முதல்மந்திரி யோகி ஆதித்யநாத்தின் இந்த அறிவிப்பால் பிரியா சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து பேசிய பிரியா சிங்கின் சகோதரர் அனிகெட் கவுதம், ‘நாங்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். ஜெர்மனிக்கு எனது சகோதரியை அனுப்புவதற்கான பண வசதி எங்களிடம் இல்லை. நாங்கள் முதல்மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்’ என தெரிவித்துள்ளார். #ISSFJuniorWorldCup #FundForIndianPlayer #YogiAdityanath
    அரியானாவில் ஜாட் சமூகத்தினருக்கு அளித்த வாக்குறுதிகளை ஆகஸ்ட் 16-ம் தேதிக்குள் நிறைவேற்றாவிட்டால், முதல்வர் பங்கேற்கும் எந்த நிகழ்ச்சியையும் நடத்த விட மாட்டோம் என ஜாட் சமூகத்தினர் எச்சரித்துள்ளனர். #haryana #jatscommunity
    கொல்கத்தா:

    அரியானா மாநிலத்தில் பாஜகவைச் சேர்ந்த மனோகர் லால் கட்டார் ஆட்சி செய்து வருகிறார். இவரது ஆட்சியில் கடந்த 2016-ம் ஆண்டு இடஒதுக்கீடு வேண்டி ஜாட் சமூகத்தினர் கலவரத்தில் ஈடுபட்டனர். அப்போது, இடஒதுக்கீடு பிரச்சனை தொடர்பாக குழு அமைத்து முடிவெடுக்கப்படும் என மாநில அரசு சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், நேற்று அகில இந்திய ஜாட் ஆரக்‌ஷான் சங்கர்ஷ் சமிதியின் பேரணி நடத்தப்பட்டது. அதில் பேசிய சமிதியின் தலைவர் யஷ்பால் மாலிக், மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் சிறப்பாக வாதிட்டு ஜட்ஸ் சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டை பெற்று தருமாறு கோரிக்கை விடுத்தார். மேலும், மத்திய அரசும், வரும் பாராளுமன்ற தேர்தலில் ஓபிசி பிரிவில் போட்டியிடுவதை எளிமையாக்கும் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

    மேலும், பாஜக அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனவும், 2016-ல் அமைதியாக நடத்தப்பட்ட போராட்டத்தை வன்முறையாக மாற்றியது பாஜகவினரே எனவும் அவர் குற்றம்சாட்டினார்.

    அதைத்தொடர்ந்து ஆகஸ்ட் 16-ம் தேதிக்குள் தங்களது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் எனவும், இல்லையெனில், அரியானா மாநிலத்தில் ஒரு பகுதியிலும் கூட முதல்மந்திரி உட்பட எந்த பாஜக தலைவர்களால் எவ்வித நிகழ்ச்சிக்கும் செல்ல முடியாது எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். #haryana #jatscommunity
    அரியானா உள்ளிட்ட பல மாநிலங்களில் விவசாயிகள் அறிவித்த போராட்டம் 2-வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், விளை பொருட்களை விற்காவிட்டால் நஷ்டம் அவர்களுக்குத்தான் என அரியானா முதல்வர் தெரிவித்துள்ளார். #farmersstrike #kisanakvash
    சண்டிகர்:

    அரியானா மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், விவசாயிகளின் அவல நிலையை அரசு கண்டுகொள்ளவில்லை எனவும் அம்மாநில விவசாயிகள் அரசு மீது குற்றம்சாட்டுகின்றனர்.

    இதனால் அரசை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை அரியானா மாநில விவசாயிகள் கையில் எடுத்தனர். அதன் ஒரு பகுதியாக கிசான் அக்வாஷ் என்ற பெயரில் அரியானா மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் நேற்று முதல் அடுத்த 10 நாட்களுக்கு விளை பொருட்களை விற்கப்போவதில்லை என அறிவித்தனர்.

    மேலும் அரியானா மாநிலம் முழுவதும் தர்ணா போராட்டம் நடத்தப்படும் எனவும், போராட்டத்தின் இறுதி நாளான ஜூலை 10-ம் நாள் பேரணி நடத்தப்படும் எனவும் அம்மாநில விவசாயிகள் அறிவித்து இருந்தனர்.

    இந்நிலையில், இந்த போராட்டம் குறித்து அம்மாநில முதல்வர் மனோகர் லால் கத்தாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, விவசாயிகளுக்கு இங்கு எவ்வித பிரச்சனையும் இல்லை என்றும், தேவையில்லாத விசயங்களில் கவனம் செலுத்துவதால் அவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் அவர் தெரித்தார்.

    மேலும், விளை பொருட்களை விற்பனை செய்யாமல் இருப்பதால் நஷ்டம் அவர்களுக்குத்தான் என்றும் முதல்மந்திரி மனோகர் லால் கத்தாரி கூறியுள்ளார். மாநில முதல் மந்திரியின் இந்த சர்ச்சை கருத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அரியானா மாநிலத்தில் மட்டும் சுமார் 6 ஆயிரத்து 800 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #farmersstrike #kisanakvash
    ×