search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதலிபாளையம்"

    • மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள்
    • காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை முதலிபாளையம் துணை மின் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் மின்தடை.

    திருப்பூர்:

    முதலிபாளையம், பழவஞ்சிபாளையம் நல்லூர், மற்றும் பூமலூர் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ள–தால் நாளை 22-ந் தேதி இந்த துணை மின் நிலையங்களில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பகிறது. அதன்படி அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை முதலிபாளையம் துணை மின் நிலையத்துக்குட்பட்ட சிட்கோ, பொன்னாபுரம், முதலிபாளையம், ராக்கியபாளையம், நல்லூர், மண்ணரை, பாரப்பாளையம், கோல்டன் நகர், ஆர்.வி.ஈ. நகர், கூலிபாளையம், காசிபாளையம், சர்க்கார் பெரிய பாளையம், பெட்டிக்கடை, சென்னிமலைபாளையம், ரெங்கேகவுண்டம்பாளையம், விஜயபுரம், மானூர், செவந்தம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    நல்–லூர் துணை மின் நிலையத்துக்குட்பட்ட நல்லூர், காளிபாளையம், சாணார்பாளையம், முத்தணம்பாளையம் ராக்கியாபாளையம் பிரிவு ஆகிய இடங்களிலும், பழவங்சிப்பாளையம் துணை மின் நிலைத்துக்குட்பட்ட செட்டிபாளையம், பழவஞ்சிபாளையம், பூங்கா நகர், பாலாஜி நகர், அய்யப்பா நகர் ஆகிய பகுதிகளிலும் மின் வினியோகம் இருக்காது.

    இது–போல் பூம–லூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட மங்கலம், சுல்தான்பேட்டை, இடுவாய், பாரதிபுரம், கணபதிபாளையம், செட்டிபாளையம், சீரணம்பாளையம், சின்னகாளிபாளையம், சின்னப்புத்தூர், பெரியப்புத்தூர், வேட்டுவபாளையம், மலைக்கோவில், வெள்ளச்செட்டிபாளையம், வடுகாளிப்பாளையம், புக்கிலிப்பாளையம், வேலாயுதம்பாளையம், பூமலூர், கணக்கம்பாளையம், பெருமாப்பாளையம், பள்ளிப்பாளையம், கிடாத்துரை புதூர் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.

    இந்த தகவலை மின் வாரிய செயற்பொறியாளர்கள் ராமச்சந்திரன், சபரிராஜன் தெரிவித்துள்ளனர்.

    • காலை 9 மணி முதல் மதியம் 1மணி வரை முகாம் நடக்கிறது.
    • சர்க்கரை மற்றும் கண்புரை சிகிச்சை முகாம் அங்கன்வாடி மையத்தில் நடைபெறுகிறது..

     திருப்பூர் :

    இந்திய சமூக நலன் மற்றும் மேம்பாட்டு குழு மற்றும் சக்தி நர்சிங் ஹோம், லோட்டஸ் கண் மருத்துவமனை சார்பில் இலவச சர்க்கரை மற்றும் கண்புரை சிகிச்சை முகாம், சிறப்பு மருத்துவ முகாம் நாளை 2-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) திருப்பூர் முதலிபாளையம் ஹவுசிங் யூனிட் அங்கன்வாடி மையத்தில் நடைபெறுகிறது. காலை 9மணி முதல் மதியம் 1மணி வரை முகாம் நடக்கிறது.

    முகாமை டாக்டர் எஸ். சஞ்சய், ஐஎஸ்டபிள்யூடி., பொதுச்செயலாளர் ராமமூர்த்தி, மாநில இணை செயலாளர் எஸ்.வி. வீரைய்யா ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைக்கின்றனர். இளைஞரணி மாநில தலைவர் என்.செல்வம், இளைஞரணி மாநில செயலாளர் வண்மீகன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    திருப்பூர் மாவட்ட செயலாளர் குமார், மாவட்ட உறுப்பினர் ஹரிஹரன் , மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் வரவேற்கின்றனர். சிறப்பு விருந்தினர்களாக முதலிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் மயூரி பிரியா நடராஜன் , துணை தலைவர் சுமதி செந்தில் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

    முகாமில் சர்க்கரை அளவு மற்றும் ரத்த அழுத்தம் அளவு பார்க்கப்படுகிறது. சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட உள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் கண் சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் மருத்துவ ஆலோசனை வழங்கப்படும். தலைவலி, கிட்டப்பார்வை, தூரப்பார்வை, கண்கட்டி, மாறுகண், நீர்வடிதல், ஒற்றைத்தலைவலி, நீர் அழுத்தம், சர்க்கரை நோய், விழித்திரை பாதிப்பு, கண்புரை, கருவிழியில் வெள்ளை இருத்தல் ஆகிய பாதிப்புகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும். இந்த முகாமில் தேர்ந்தெடுக்கப்படும் நோயாளிகளுக்கு குறிப்பிட்ட அறுவை சிகிச்சை முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

    • காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்தடை.
    • பராமரிப்பு பணி நாளை நடக்கிறது.

    திருப்பூர் :

    தமிழ்நாடு மின்சார வாரியம் திருப்பூர் மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- முதலிபாளையம், பழவஞ்சிப்பாளையம், நல்லூர் துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

    எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை சிட்கோ, பொன்னாபுரம், முதலிபாளையம், ராக்கியபாளையம், நல்லூர், மண்ணரை, பாரப்பாளையம், கோல்டன் நகர், ஆர்.வி.இ.நகர், கூலிபாளையம், காளிபாளையம், சர்க்கார் பெரியபாளையம், பெட்டிக்கடை, சென்னிமலைபாளையம், ரங்கேகவுண்டம்பாளையம், விஜயாபுரம், மானூர் செவந்தம்பாளையம், நல்லூர், காளிபாளையம், சாணார்பாளையம், முத்தணம்பாளையம், ராக்கியாபாளையம் பிரிவு, செட்டிபாளையம், பழவஞ்சிபாளையம், பூங்காநகர், பாலாஜிநகர், அய்யாவு நகர் பகுதியில் மின்தடை ஏற்படும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

    ×