search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்"

    புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் அருகில் மின்வாரியத்தில் பணி புரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ரூ.380 தினக்கூலியாக வழங்கக்கோரி சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் அருகில் மின்வாரியத்தில் பணி புரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ரூ.380 தினக்கூலியாக வழங்கக்கோரி சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க நிர்வாகிகளுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் மின்சார வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ரூ.380 தினக்கூலியாக வழங்கப்படும் என மின்சாரத்துறை அமைச் சர் எழுத்துப்பூர்மாக வாக்குறுதி அளித்துள்ளார். 

    அமைச்சர் அளித்துள்ள வாக்குறுதிக்கு மாறாக ரூ.240 மட்டுமே தினக்கூலியாக வழங்கப்படுகிறது. எனவே, அமைச்சர் அளித்துள்ள வாக்குறுதியை மின்சாரவாரியம் நிறைவேற்ற வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு  மின்ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு)  புதுக் கோட்டை வட்டத் தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். பொருளாளர் சாகுல் ஹமீது முன்னிலை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் முகமது  லிஜின்னா ஆர்ப்பாட்டத்தை தொடங்கி  வைத்தார். வட்டச் செயலாளர் கலிய பெருமாள் மற்றும் தோழமைச் சங்க நிர்வாகிகள் அன்பு மணவாளன், சலோமி, துரை.நாராயணன் உள்ளிட்டோர் பேசினர். சங்கத்தின் மாநிலச் செய லாளர் எம்.பன்னீர்செல்வம் நிறைவுரையாற்றினார்.
    ×