search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்னல் தாக்கி விவசாயி பலி"

    • விவசாய பணிகளை செய்து கொண்டிருந்த போது பரிதாபம்
    • அரக்கோணம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி மற்றும் ரெட்டிவலம், சிறுணமல்லி, சயனபுரம், கீழ்வீதி, பனப் பாக்கம், திருமால்பூர் ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை பலத்த காற்று, இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.

    நெமிலியை அடுத்த சயனபுரம் கிரா மம் பெரிய தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 43), விவசாயி. நேற்று முன்தினம் மாலை தனது இவர் நிலத்தில் விவசாய பணிகளை செய்து கொண்டிருந்த போது எதிர்பாராதவித மாக மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த நெமிலி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    • இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
    • மின்னல் தாக்கி அவர் விழுந்து இறந்து கிடந்தார்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா உத்தனப்பள்ளி அருகே பி.கொத்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது50). இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்றுமதியம் ஜெயபிகாஷ் அருகே உள்ள விவசாய நிலங்களுக்கு சென்று கால்நடைகளுக்கு தீவனம் எடுக்க சென்றார்.

    அந்த சமயம் இடியுடன் கனமழை பெய்தது. இதனால் மின்னல் தாக்கி அவர் விழுந்து இறந்து கிடந்தார்.

    இது குறித்து உத்தனப்பள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×