search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Farmer killed by lightning"

    • விவசாய பணிகளை செய்து கொண்டிருந்த போது பரிதாபம்
    • அரக்கோணம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி மற்றும் ரெட்டிவலம், சிறுணமல்லி, சயனபுரம், கீழ்வீதி, பனப் பாக்கம், திருமால்பூர் ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை பலத்த காற்று, இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.

    நெமிலியை அடுத்த சயனபுரம் கிரா மம் பெரிய தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 43), விவசாயி. நேற்று முன்தினம் மாலை தனது இவர் நிலத்தில் விவசாய பணிகளை செய்து கொண்டிருந்த போது எதிர்பாராதவித மாக மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த நெமிலி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    ×