search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்சாரம் தாக்கி இளம்பெண் பலி"

    போளூரில் மின்சாரம் தாக்கி இளம்பெண் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    போளூர்:

    போளூர் கண்ணன் தெருவை சேர்ந்தவர் பச்சையப்பன். இவரது மனைவி நிர்மலா (வயது32). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    நேற்று போளூரில் கன மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது வீட்டில் இருந்த நிர்மலா டி.வி.யில் பாதிப்பு ஏற்படுமோ என்று பயந்து கேபிள் வயரை டி.வியில் இருந்து கையால் பிடுங்கி எடுத்தார்.

    அப்போது மின்சாரம் தாக்கி நிர்மலா துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இது குறித்து தகவலறிந்த போளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லித்தோப்பில் மின்சாரம் தாக்கி உடல் கருகிய இளம்பெண் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

    புதுச்சேரி:

    புதுவை நெல்லித்தோப்பு பெரியார்நகரை சேர்ந்தவர் ரொசாரியோ. இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி விக்டோரியா (வயது 35). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சம்பவத்தன்று விக்டோரியா வீட்டின் மொட்டை மாடியில் துணி காய வைக்க சென்றார்.

    ஈரத்துணியை விசிறும்போது எதிர்பாராதவிதமாக மொட்டை மாடி வழியே சென்ற உயர்மின்அழுத்த கம்பியில் துணி பட்டதால் விக்டோரியாவை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்டு உடல் கருகிய நிலையில் விக்டோரியாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று விக்டோரியா பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×