search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின் தொழிலாளி"

    • மோட்டார் சைக்கிள் விபத்தில் மில் தொழிலாளி இறந்தார்.
    • இதில் படுகாயமடைந்த வெங்கடேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள அய்யனார்புரத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மகள் வெங்கடேஷ் (வயது 22). இவர் அதே பகுதியில் உள்ள நூற்பாலையில் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று வேலையை முடித்துவிட்டு வெங்கடேஷ் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். ராஜபாளையம்-ஆலங்குளம் ரோட்டில் உள்ள சத்திரப்பட்டி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே சென்றபோது திடீரென நாய் குறுக்கே சென்றது. இதில் நிலைத்தடுமாறிய மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த வெங்கடேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அவரது தந்தை பாலசுப்பிரமணியன் கொடுத்த புகாரின் பேரில் கீழராஜகுலராமன் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    ×