search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாம்பழ சீசன்"

    • நாமக்கல் மாவட்டத்தில் சேந்தமங்கலத்திலும், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் மாமரங்கள் அதிகளவில் உள்ளன.
    • கடந்த 2 நாட்களாக சேலம் மார்க்கெட்டுக்கு மாம்பழம் வரத்து வெகுவாக குறைந்துள்ளது.

    சேலம்:

    இந்தியாவில் மாம்பழம் சாகுபடியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம் உள்பட பல மாநிலங்களில் மாமரங்கள் அதிகளவில் உள்ளன. தமிழக அளவில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் உள்பட பல பகுதிகளில் மாமரங்கள் நிறைந்து காணப்படுகின்றன.

    இந்த ஆண்டில் மாம்பழம் விளைச்சல் சீராக இருந்தது. குறிப்பாக மே மாதம் தொடக்கத்தில் மாம்பழம் வரத்து அதிகமாக இருந்தது. தற்போது சேலம் மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்து வருகிறது. இதனால் மாம்பழம் சீசன் ஓரிரு வாரத்தில் முடியும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து சேலம் கடைவீதி மாம்பழம் மொத்த வியாபாரிகள் கூறியதாவது:-

    சேலம் மாவட்டத்தில் வரகம்பாடி, அடிமலைப்புதூர், அயோத்தியாப்பட்டணம், நங்கவள்ளி, தாரமங்கலம், ஜலகண்டாபுரம், மேச்சேரி, பேளூர், நீர்முள்ளிக்குட்டை, கூட்டாத்துப்பட்டி, ஏற்காடு அடிவாரம், தும்பல், கருமந்துறை, வாழப்பாடி, மேட்டூர், காமலாபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும், நாமக்கல் மாவட்டத்தில் சேந்தமங்கலத்திலும், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் மாமரங்கள் அதிகளவில் உள்ளன.

    இந்த பகுதிகளில் இருந்து மாம்பழம் சேலம் மார்க்கெட்டுக்கும், இதைதவிர தமிழகத்தில் பிற இடங்களுக்கும் அனுப்பப்படுகிறது. குறிப்பாக சேலத்தில் இருந்து வட மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    கடந்த ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் இருந்து சேலம் மார்க்கெட்டுக்கு மல்கோவா, குண்டு, சேலம் பெங்களூரா, செந்தூரா, இமாம்பசந்த், குதாத், கிளிமூக்கு மாங்காய் வரத்து கணிசமாக இருந்தது. மே 15-ந் தேதிக்கு மேல் உச்சக்கட்டமாக வரத்து 70 முதல் 80 டன்னாக இருந்தது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக சேலம் மார்க்கெட்டுக்கு மாம்பழம் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி சேலம் மார்க்கெட்டுக்கு 30 டன் மாங்காய்தான் விற்பனைக்கு வந்தது. இன்னும் ஓரிரு வாரத்தில் மாங்காய் சீசன் முடியும் தருவாயில் உள்ளது. அடுத்த வாரம் மாம்பழம் சீசனில் கடைசி ரகமான நீலம் வரத்து தொடங்கும். நீலம் பழம் இரு வாரத்திற்கு இருக்கும்.

    இம்மாதம் கடைசியில் சீசன் முழுமையாக முடிந்து விடும். ஜூலையில் மொத்த மார்க்கெட்டுக்கே 3 முதல் 5 டன் அளவுக்கு மட்டுமே மாம்பழம் வரத்து இருக்கும். தற்போது மாம்பழம் ரகத்தை பொறுத்து ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.150 என விற்பனை செய்யப்படுகிறது.

    இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.

    • சேலம் என்றாலே அனைவருக்கும் நினைவு வருவது மாம்பழம் தான்.
    • அந்த வகையில் சேலத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதத்தில் மாம்பழம் சீசன் களைக்கட்டி இருக்கும்.

    சேலம்:

    சேலம் என்றாலே அனைவருக்கும் நினைவு வருவது மாம்பழம் தான். அத்தகைய மாம்பழங்கள் சேலத்தில் இருந்து வெளி ஊர்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் சேலத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதத்தில் மாம்பழம் சீசன் களைக்கட்டி இருக்கும். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சேலம் வ.உ.சி. பழ மார்க்கெட், மண்டிகளுக்கு மாம்பழம் வரத்து அதிக அளவில் இருக்கும்.

    கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலேயே மாம்பழ சீசன் தொடங்கி ஜூன் மாதம் வரையில் இருந்தது. ஆனால் மாம்பழ சீசன் தற்போது ஏப்ரல் மாதத்தில் தான் தொடங்கியுள்ளது. கடந்த 2 நாட்களாக மாம்பழம் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    டவுனில் உள்ள பல்வேறு பல மண்டிகளுக்கு மல்கோவா, சேலம் பெங்களூரா, நடு சாளை, இமாம் பசந்த் ஆகிய மாம்பழங்கள் விற்பனைக்கு வர தொடங்கி இருக்கிறது.

    சேலத்தை சுற்றியுள்ள குப்பனூர், வேப்பிலைப்பட்டி, சங்ககிரி, மகுடஞ்சாவடி, நங்கவள்ளி உள்பட பல இடங்களில் உள்ள மாந்தோப்புகளில் இருந்து தினமும் 10 டன் அளவிற்கு பல்வகை மாம்பழங்கள் வருகிறது. இதனை மண்டியிலிருந்து மொத்த வியாபாரிகளும், சில்லறை வியாபாரிகளும் வாங்கி செல்கின்றனர். மல்கோவா, சேலம் பெங்களூரா, இமாம் பசந்த் மாம்பழங்கள் ஒரு கிலோ ரூ.150 முதல் ரூ.200 வரையிலும், குண்டு வகை மாம்பழம் ரூ.100 முதல் ரூ.150 வரையிலும், நடு சாலை கிலோ ரூ.140 முதல் ரூ.170 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. கிருஷ்ணகிரி, சேந்தமங்கலம் பகுதிகளில் இருந்து இன்னும் சேலத்திற்கு மாம்பழம் வரத்து தொடங்கவில்லை. இன்னும் 15 நாட்களுக்குள் அங்கிருந்தும் மாம்பழங்கள் வரும் என்று வியாபாரிகள் கூறுகிறார்கள். வருகிற 15-ந் தேதிக்குள் மாம்பழம் வரத்து உச்சத்தை தொடும் என எதிர்பார்க்கிறோம்.

    60 நாட்களுக்கு மேலாக சீசன் களைகட்டும். வெளியூர் வியாபாரிகள் பல்வேறு மாம்பழங்களை புக்கிங் செய்து வருகிறார்கள். ஆனால் வியாபாரம் இந்த ஆண்டு நல்ல நிலையில் இருக்கும் என நம்பிக்கை உள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ×