என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மான் இறைச்சி"
- ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு
- வனக்குழுவினர் ரோந்து பணியில் சிக்கினர்
வாணியம்பாடி:
வாணியம்பாடி அடுத்த தமிழக ஆந்திர எல்லைப்பகு திகளில் உள்ள மாதகடப்பா வனப்பகுதியில் வெலதிகாம ணிபெண்டா என்ற இடத் தில் வாணியம்பாடி வனச்ச ரக அலுவலர் இளங்கோவன் தலைமையில் வனக்குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது காப்புக் காட்டில் 2 பேர் மான் இறைச்சி சமைத்துக் கொண்டிருந்தனர்.
அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசா ரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் தேவராஜபுரம் பகுதியை சேர்ந்த மோகன் (வயது 50), சிந்தகமணிபெண்டாவை சேர்ந்த பாலசுப்பிரமணி (59) என தெரியவந்தது.
பின்னர் அவர்கள் 2 பேரை யும் கைது செய்த வனத்துறை யினர் அவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.1லட்சம் அபராதம் விதித்தனர். மேலும் அவர்களிடம் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
- செந்தில்ராஜ் என்பவர் அடிபட்ட மானை வீட்டிற்கு எடுத்து சென்று சமைப்பதற்காக பதுக்கி உள்ளார்.
- வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
உடுமலை :
ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை வனச் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் யானை ,புலி, சிறுத்தை ,மான், காட்டெருமை ,கடமான் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
அவை உணவு தேவையை நிறைவு செய்த பின்பு தாகம் தீர்ப்பதற்காக உடுமலை திருமூர்த்தி மலை சாலையை கடந்து திருமூர்த்தி அணைக்கு வருவது வழக்கம்.அந்த வகையில் நேற்று முன்தினம் மான் ஒன்று உடுமலை- திருமூர்த்தி மலை சாலையை கடக்க முயற்சித்து உள்ளது.
அப்போது எதிர்பாராத விதமாக அந்த வழியாக வந்த வாகனத்தில் அடிபட்டு விட்டதாக தெரிகிறது. அந்த வழியாக சென்ற திருமூர்த்தி நகரை சேர்ந்த செந்தில்ராஜ் என்பவர் அடிபட்ட மானை வீட்டிற்கு எடுத்து சென்று சமைப்பதற்காக பதுக்கி உள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த உடுமலை வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.அப்போது செந்தில்ராஜ் மான் கறியை பதுக்கி வைத்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்