search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காப்பு காட்டில் மான் இறைச்சி சமைத்த 2 பேர் கைது
    X

    காப்பு காட்டில் மான் இறைச்சி சமைத்த 2 பேர் கைது

    • ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு
    • வனக்குழுவினர் ரோந்து பணியில் சிக்கினர்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அடுத்த தமிழக ஆந்திர எல்லைப்பகு திகளில் உள்ள மாதகடப்பா வனப்பகுதியில் வெலதிகாம ணிபெண்டா என்ற இடத் தில் வாணியம்பாடி வனச்ச ரக அலுவலர் இளங்கோவன் தலைமையில் வனக்குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது காப்புக் காட்டில் 2 பேர் மான் இறைச்சி சமைத்துக் கொண்டிருந்தனர்.

    அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசா ரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் தேவராஜபுரம் பகுதியை சேர்ந்த மோகன் (வயது 50), சிந்தகமணிபெண்டாவை சேர்ந்த பாலசுப்பிரமணி (59) என தெரியவந்தது.

    பின்னர் அவர்கள் 2 பேரை யும் கைது செய்த வனத்துறை யினர் அவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.1லட்சம் அபராதம் விதித்தனர். மேலும் அவர்களிடம் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×