search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர்களுக்கு விழிப்புணர்வு"

    • வன உயிரினங்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
    • பிலுகுண்டுலு அரசு தலைமை ஆசிரியர் பிலிகுண்டுலுவில் வசித்துவரும் மலைவாழ் மக்கள் மற்றும் வனங்களின் சிறப்பு குறித்து மாணவர்களுக்கு தெளிவாக எடுத்துரைத்தனர்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டம் காவேரி தெற்கு வனஉயிரின சரணாயலம் அஞ்செட்டி வனச்சரகம் காவிரி கரையோரம் அமைந்துள்ள பிலிகுண்டுலு சூழல் சுற்றுலா மையத்தில் அஞ்செட்டி, கேரட்டி மற்றும் பிலிகுண்டுலு கிராமங்களில் உள்ள 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயின்று வரும் அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வனம் மற்றும் வன உயிரினங்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.

    அரசு பள்ளி மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் வனத்துறை வாகன ங்களில் அழைத்து வரப்பட்டனர்.

    முகாமில் ஓசூர் வனக்கோட்டத்தில் உள்ள பல்வேறு வகையான வன உயிரினங்களின் வகைகள், அவைகளினால் ஏற்படும் பயன்கள் மற்றும் அவற்றை பாதுகாப்பதன் அவசியம் குறித்து ஓசூர் வனக்கோட்ட உதவி வனப்பாதுகாவலர் ராஜமாரியப்பன் மாணவ, மாணவிகளுக்கு விளக்கினார்.

    மேலும் காவேரி தெற்கு வன உயிரின சரணாலயத்தின் சிறப்பு, அங்கு வாழ்ந்து வரும் வன உயிரினங்கள் மற்றும் அவைகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து அஞ்செட்டி வனச்சரக அலுவலர் சீதாராமன் விவரித்தார்.

    பிலுகுண்டுலு அரசு தலைமை ஆசிரியர் பிலிகுண்டுலுவில் வசித்துவரும் மலைவாழ் மக்கள் மற்றும் வனங்களின் சிறப்பு குறித்து மாணவர்களுக்கு தெளிவாக எடுத்துரைத்தனர்.

    அன்புக்கரங்கள் அறக்கட்டளை தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் உதவியுடன் அரசு பள்ளி மாணவ மாணவியர்களுக்கு விளையாட்டு போட்டிகள், ஓவிய போட்டிகள், யோகா பயிற்சி, ஓரிகாமி மூலம் தாள்களில் பொம்மைகள் செய்தும் வனங்களை பாதுகாப்பது குறித்து விளக்கப்பட்டது.

    மேலும் தென்னிந்தியாவில் வாழும் பறவைகளை இனங்கண்டறிதல் தொடர்பான கையேடுகள் வழங்கப்பட்டு விளக்கப்பட்டது. அத்துடன் மாணவ, மாணவிகளுக்கு தேவையான பேனா, பென்சில், கலர் பென்சில்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான படிப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

    விழிப்புணர்வு முகாமில் கலந்துகொண்ட சுமார் 100 அரசு பள்ளி மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டு பின்னர் வனத்துறை வாகனத்தில் பாதுகாப்பாக அவர்களது பகுதிக்கு அழைத்துச்சென்று விடப்பட்டனர்.

    • முதுமலையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
    • வன வளம் ஏற்பட புலிகளை பாதுகாக்க வேண்டும்.

    ஊட்டி

    உலக புலிகள் தினத்தை–யொட்டி முதுமலை புலிகள் காப்பக நிர்வாகம் சார்பில் மசினகுடி, முதுமலையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் உள்ள மைதானத்தில் புலிகள் பாதுகாப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதற்கு புலிகள் காப்பக துணை இயக்குனர் வித்யா தலைமை தாங்கினார்.

    தொடர்ந்து ஆதிவாசி இளைஞர்களுக்கான கைப்பந்து போட்டியை தொடங்கி வைத்தார். பின்னர் தெப்பக்காடு சுற்றுலா பயணிகள் வரவேற்பு மையத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. புலிகள் பாதுகாப்பு, வனங்களின் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விழிப்பு–ணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    தொடர்ந்து ஓவியம் மற்றும் கைப்பந்து உள்பட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் பரிசுகள் வழங்கப்பட்டது.

    முன்னதாக புலி பாதுகாப்பு குறித்து புலி முகமூடி அணிந்து வனத்துறையினர் ஆதிவாசி குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கு விழிப்பு–ணர்வு ஏற்படுத்தினர்.

    அப்போது வனத்துறையினர் கூறும்போது, வன வளம் ஏற்பட புலிகளை பாதுகாக்க வேண்டும். காடுகளை பாதுகாப்பதில் புலிகள் முக்கிய இடத்தை வகிக்கிறது. இதன் மூலம் நிலம், நீர், காற்று மனிதர்களுக்கு கிடைக்கிறது. எனவே காடுகளையும், அதை சார்ந்து வாழக்கூடிய புலிகள் உள்ளிட்ட வன உயிரினங்களையும் நாம் அனைவரும் பாதுகாக்க முன்வர வேண்டும் என்றனர்.

    இதில் ஊட்டி வன அலுவலர் சச்சின் துக்காராம், முதுமலை வனச்சரகர்கள் விஜய், முரளி, மனோஜ் குமார், பவித்ரா, கணேஷ் மற்றும் வன ஊழியர்கள், மாண–வர்கள் கலந்து கொண்டனர்.

    ×