search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர் சேர்க்கைக்காக"

    • பொதுமக்கள் பலர் மாணவர்களை பள்ளியில் சேர்க்க வந்திருந்திருந்தனர்.
    • பெற்றோர்களுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து பள்ளியில் சேர்த்தனர்.

    பு.புளியம்பட்டி:

    தமிழகத்தில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டு நடந்து வருகிறது.இதேபோல் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை வகுப்புகள் தொடங்கப்படுகிறது.

    ஈரோடு மாவட்டம் புளியம்பட்டியை அடுத்து பனையம்பள்ளி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி கோடை விடுமுறை முடிந்து நேற்று திறக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து பள்ளிக்கு வந்த மாணவ- மாணவிகளை தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் வரவேற்றனர்.மாணவர்கள் உற்சா கத்துடன் வகுப்பறைக்கு சென்றனர்.

    இதையொட்டி புளி யம்பட்டி, பனையம்பள்ளி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பலர் மாணவர்களை பள்ளியில் சேர்க்க வந்திருந்திருந்தனர்.

    மாணவர்கள் சேர்க்கைக்காக பெற்றோர்களுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து பள்ளியில் சேர்த்தனர்.

    இதையடுத்து பள்ளிக்கு புதிதாக வந்த மாணவ, மாணவிகள் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து வாழ்த்துக்கள் தெரிவித்து மகிழ்ந்தனர்.

    ×