என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மாணவ மாணவிகள் அவதி"
- சூளிகிரி ஊராட்சிக்குட்பட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து மாணவ, மாணவிகள் நெரிகம் அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர்.
- நெரிகம் அரசு பள்ளியில் போதிய கழிப்பறை வசதி இல்லாததால் மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியத்தில் தொலைதூர ஊராட்சியாக நெரிகம் உள்ளது. இங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் சுற்றுவட்டார கிராமமான குடிசாதனப்பள்ளி, சின்னாரன் தொட்டி, கெதளன் தொட்டி, மழகலக்கி, தண்ணீர் கொண்டலப்பள்ளி, சிகலப்பள்ளி, மற்றும் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து மிகவும் பின் தங்கிய சமுதாயத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்தப் பள்ளியில் உள்ள மாணவ மாணவிகள் பல ஆண்டுக்கு முன்பு கட்டபட்ட கழிவறையை பயன்படுத்தி வந்தனர். இந்த கழிப்பறையானது சில ஆண்டுக்கு முன்பு முற்றிலும் சேதமானதால் அதை புதுப்பிக்க முடியாமல் போனது.
இதனால் பள்ளி எஸ். எம்.சி.நிர்வாகிகள், ஆசிரியர்கள், அதிகாரிகளுக்கு புதிய கழிவறை கட்டிதர கோரிக்கை வைத்தனர். ஆனால் கழிவறை இல்லாததால் மாணவர்கள் பள்ளி சுற்று சுவரை தாண்டி ஒதுக்கு புறத்திற்கு சென்று வருகின்றனர்.
இதை அறிந்த அதிகாரிகள் தனியார் நிறுவனங்கள் முன் வந்து மாணவர்களுக்கு தனித்தனியே கழிப்பறை கட்டி தந்து மாணவர்களின் நீண்ட நாள் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று பள்ளி மேலாண்மைக்குழு நிர்வாகிகள் இந்துராணி ராமசந்திரன், நாராயணசுவாமி மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களின் கோரிக்கை விடுக்கின்றனர்.
- 40-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர்.
- கல்வித் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாப்பிரெட்டிப்பட்டி,
தருமபுரி மாவட்டம், கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தாளநத்தம் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதி காவேரிபுரம் அரசு துவக்க பள்ளியில் சுமார் 40-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் இவர்களுக்கு பள்ளி அருகில் கழிப்பிட கட்டிடம் கட்டப்பட்டு இருந்தது. கட்டிடத்தை பராமரிப்பு செய்வதாக உடைக்கப்பட்ட நிலையில் பல மாதங்கள் ஆகியும் இதுவரை அவற்றை முறையாக பராமரிப்பு செய்யப்படாமல் இருந்து வருவகின்றனர். இதனால் பள்ளி வரும் குழந்தைகள் கழிப்பிட வசதி இன்றி பெரும் அவருக்கும் சிரமத்திற்கும் உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், கல்வித் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்