search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெரிகம் அரசு பள்ளியில் போதிய கழிப்பறை வசதி இல்லாததால்மாணவ மாணவிகள் அவதி
    X

    நெரிகம் அரசு பள்ளியில் போதிய கழிப்பறை வசதி இல்லாததால்மாணவ மாணவிகள் அவதி

    • சூளிகிரி ஊராட்சிக்குட்பட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து மாணவ, மாணவிகள் நெரிகம் அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர்.
    • நெரிகம் அரசு பள்ளியில் போதிய கழிப்பறை வசதி இல்லாததால் மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியத்தில் தொலைதூர ஊராட்சியாக நெரிகம் உள்ளது. இங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் சுற்றுவட்டார கிராமமான குடிசாதனப்பள்ளி, சின்னாரன் தொட்டி, கெதளன் தொட்டி, மழகலக்கி, தண்ணீர் கொண்டலப்பள்ளி, சிகலப்பள்ளி, மற்றும் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து மிகவும் பின் தங்கிய சமுதாயத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    இந்தப் பள்ளியில் உள்ள மாணவ மாணவிகள் பல ஆண்டுக்கு முன்பு கட்டபட்ட கழிவறையை பயன்படுத்தி வந்தனர். இந்த கழிப்பறையானது சில ஆண்டுக்கு முன்பு முற்றிலும் சேதமானதால் அதை புதுப்பிக்க முடியாமல் போனது.

    இதனால் பள்ளி எஸ். எம்.சி.நிர்வாகிகள், ஆசிரியர்கள், அதிகாரிகளுக்கு புதிய கழிவறை கட்டிதர கோரிக்கை வைத்தனர். ஆனால் கழிவறை இல்லாததால் மாணவர்கள் பள்ளி சுற்று சுவரை தாண்டி ஒதுக்கு புறத்திற்கு சென்று வருகின்றனர்.

    இதை அறிந்த அதிகாரிகள் தனியார் நிறுவனங்கள் முன் வந்து மாணவர்களுக்கு தனித்தனியே கழிப்பறை கட்டி தந்து மாணவர்களின் நீண்ட நாள் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று பள்ளி மேலாண்மைக்குழு நிர்வாகிகள் இந்துராணி ராமசந்திரன், நாராயணசுவாமி மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களின் கோரிக்கை விடுக்கின்றனர்.

    Next Story
    ×