என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மலைக்கோவில்"
- கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழா 29-ந்தேதி இரவு 9 மணிக்கு கிராம சாந்திபூஜை நடைபெற்றது.
- மாலை 4 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், இரவு ௮ மணிக்கு யானை வாகன பவனியும் நடைபெற்றது.
மங்கலம் :
மங்கலத்தை அடுத்த மலைக்கோவில் பகுதியில் குழந்தை வேலாயுதசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழா 29-ந் தேதி இரவு 9 மணிக்கு கிராம சாந்திபூஜை நடைபெற்றது. மாலை நேரங்களில் சாமி கிரிவலம் நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு மயில் வாகன பவனி நடைபெற்றது. பின்னர் நேற்று மாலை 4 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், இரவு 8 மணிக்கு யானை வாகன பவனியும் நடைபெற்றது. இன்று (ஞாயிற்றுக்கிமை) காலை 6 மணிக்கு விநாயகர், குழந்தை வேலாயுதசுவாமி வள்ளி தெய்வானையுடன் தேரோட்டம் நடைபெற்றது. பின்னர் மாலை 3 மணிக்கு தேர் கிரிவலம் வருதல் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (திங்கட்கிழமை) இரவு 7 மணிக்கு பரிவேட்டை, குதிரை வாகன பவனி நடைபெறுகிறது. நாளைமறுதினம் காலை 11 மணிக்கு மகாதரிசனம் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு கொடி இறக்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. வருகிற 8-ந் தேதி மஞ்சள் நீர் உற்சவத்துடன் தேர்த்திருவிழா நிறைவடைகிறது.
- மலைக் கோயிலில் இருந்து அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேசுவரா் கோயிலில் சுவாமி எழுந்தருளினாா்.
- காலை 10 மணி மற்றும் மாலை 4 மணி ஆகிய நேரங்களில் அபிஷேக ஆராதனையும், திருவீதி உலா நடைபெற்றது.
காங்கயம் :
காங்கயம் சிவன்மலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த அக்டோபா் 26 ந் தேதி தொடங்கியது. இதையொட்டி, மலைக் கோயிலில் இருந்து அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேசுவரா் கோயிலில் சுவாமி எழுந்தருளினாா். அங்கு தினமும் காலை 10 மணி மற்றும் மாலை 4 மணி ஆகிய நேரங்களில் அபிஷேக ஆராதனையும், திருவீதி உலா காட்சியும் நடைபெற்றது.
கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார விழா கடந்த திங்கட்கிழமை இரவு நடைபெற்றது. பக்தா்கள் அதிக அளவில் சூர சம்ஹார நிகழ்வில் கலந்து கொண்டனா். பின்னா் முருகப் பெருமான், தெய்வானை திருக்கல்யாண உற்சவம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
விழா நிறைவு நாளான நேற்று மஞ்சள் நீராட்டு உற்சவம் நடைபெற்று, மாலை சுப்பிரமணியா் அடிவாரத்தில் இருந்து சப்பரத்தில் படிக்கட்டுகள் வழியாக எடுத்துச் செல்லப்பட்டு, மலைக் கோயிலுக்கு திரும்பினாா். விழாவில் அனைவருக்கும் பிரசாரம் வழங்கப்பட்டது. கந்த சஷ்டி விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்