search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மயக்கமடைந்து"

    • கள்ளக்குறிச்சி அருகே வண்டு கடித்து விவசாயி பலியானார்.
    • கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே தண்டலை கிராமத்தைச் சேர்ந்தவர் துரைக்கண்ணு (வயது 71) விவசாயி, இவர் நேற்று முன்தினம் தனது விவசாய நிலத்தில் உள்ள வாழைத்தாரை வெட்டினார். அப்போது அங்கிருந்த 30-க்கும் மேற்பட்ட கரு விஷ வண்டுகள் அவரை கடித்த. இதில் வலியால் துடித்த துரைக்கண்ணு மயக்கமடைந்து அதே இடத்தில் கீழே விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மகன் பழனிச்சாமி கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    ×