search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மஞ்சள் குவிண்டால்"

    • விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.14 ஆயிரத்து 499-க்கு விற்பனையானது.
    • இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மஞ்சள் சந்தை யில் கடந்த ஜூலை முதல் மஞ்சள் விலை உயரத் தொடங்கியது. குவிண்டால் ரூ.10 ஆயிரத்துக்கு கீழ் விற்பனையாகி வந்த மஞ்சள் விலை ரூ.14 ஆயிரத்தை தொட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இந்நிலையில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் மஞ்சள் விலை ரூ.15 ஆயிரத்து 422-க்கு விற்பனையானது. 13 ஆண்டுகளுக்கு பிறகு மஞ்சள் விலை ரூ.15 ஆயிரத்தை கடந்து உச்ச த்தை தொட்டது. தொடர்ந்து மஞ்சள் விலையில் சரிவு ஏற்பட்டு ரூ.12 ஆயிரம் முதல் ரூ.13 ஆயிரம் வரை விற்பனையானது.

    இந்நிலையில் கோபி கூட்டுறவு சங்கத்தில் நேற்று நடந்த ஏலத்தில் விரலி மஞ்சள் அதிகபட்சமாக குவிண்டால் ஒரு ரூ.14 ஆயிரத்து 499-க்கு விற்பனையானது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இந்த விலை உயர்வு மற்ற சந்தைகளில் எதிரொலிக்கவில்லை என்றாலும் வரும் காலங்களில் மஞ்சள் விலை உயரும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகளிடையே ஏற்பட்டுள்ளது.

    பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு 878 மூட்டை மஞ்சள் வரத்தான நிலையில் 797 மூட்டைகள் விற்பனையானது. விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.9,192 முதல் ரூ.13 ஆயிர த்து 569, கிழங்கு மஞ்சள் ரூ.8,599 முதல் ரூ.11,889 வரை விற்பனையானது.

    ஈரோடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு 2397 மூட்டை மஞ்சள் வரத்தான நிலையில் 1,050 மூட்டைகள் விற்பனையானது. விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.8,589 முதல் ரூ.13 ஆயிரத்து 589, கிழங்கு மஞ்சள் ரூ.7,599 முதல் ரூ.11,913 வரை விற்பனையானது.

    ஈரோடு கூட்டுறவு சங்கத்துக்கு 382 மூட்டை மஞ்சள் வரத்தான நிலையில் 264 மூட்டைகள் விற்பனையானது. விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.7,189 முதல் ரூ.13 ஆயிரத்து 600, கிழங்கு மஞ்சள் ரூ.6,879 முதல் ரூ.12,200 வரை விற்பனையானது.

    • ஈரோடு பகுதியில் ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடம், ஈரோடு மற்றும் கோபி சொசைட்டி என 4 இடங்களில் மஞ்சள் ஏலம் நடக்கிறது.
    • மழை காலமாக உள்ளதாலும், தேவை அதிகரிப்பாலும், பிற மாநில வியாபாரிகள் வரத்து அதிகரித்து ள்ளதாலும் மஞ்சள் விலை உயர்ந்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு பகுதியில் ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடம், ஈரோடு மற்றும் கோபி சொசைட்டி என 4 இடங்களில் திங்கள் முதல் வெள்ளி வரை மஞ்சள் ஏலம் நடக்கிறது.

    கடந்த பல நாட்களாக குவிண்டால் மஞ்சள் சராசரியாக 7,500 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் கடந்த சில நாட்களாக 8,000 ரூபாயை கடந்து விற்பனையானது.

    நேற்று பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் ஒரு குவிண்டால் விரலி மஞ்சள் 5,799 ரூபாய் முதல் 8,129 ரூபாய்க்கும், கிழங்கு 5,280 முதல் 6,839 ரூபாய்க்கும் விற்பனை யானது. இதேபோல் ஈரோடு ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் விரலி 5,729 முதல் 8,259 ரூபாய் வரையிலும், கிழங்கு 5,369 முதல் 6,802 ரூபா ய்க்கும் விற்பனையானது.

    ஈரோடு சொசைட்டியில் விரலி 5,739 முதல் 8,210 ரூபாய்க்கும், கிழங்கு 5,399 முதல் 6,959 ரூபாய் வரையிலும், கோபி சொசைட்டியில் விரலி 6,083 முதல் 6,899 ரூபாய்க்கும், கிழங்கு 6,274 முதல் 6,375 ரூபாய் வரையிலான விலையில் விற்பனையானது.

    இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது:

    மழை காலமாக உள்ளதாலும், தேவை அதிகரிப்பாலும், பிற மாநில வியாபாரிகள் வரத்து அதிகரித்து ள்ளதாலும் மஞ்சள் விலை உயர்ந்துள்ளது.

    தரமான மஞ்சளுக்கு 8,000 ரூபாய் கடந்து விலை கிடைப்பதால் இருப்பு வைத்துள்ள விவசாயிகள் மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர். வரும் நாட்களில் இதே போன்ற விலை உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×