search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகளிர் கால்பந்து"

    • வெற்றி பெற்ற விராங்கனைகளின் பெற்றோர்கள், உறவினர்கள் என பலரும் ரெயில் நிலையம் வந்திருந்தனர்.
    • இறுதிப்போட்டியுடன் சேர்த்து மொத்தம் 10 போட்டிகளில் விளையாடியதாக வீராங்கனைகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் நடைபெற்ற 27வது சீனியர் தேசிய மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு பெண்கள் அணி வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. போட்டியில் வென்ற அணியினர் இன்று தமிழகம் திரும்பினர். வெற்றிக் கோப்பையுடன் வந்த அவர்களுக்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வீராங்கனைகளை வரவேற்று உற்சாகப்படுத்தும் வகையில் ரெயில் நிலையத்தில் மேளதாளங்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

    மேலும், வெற்றி பெற்ற விராங்கனைகளின் பெற்றோர்கள், உறவினர்கள் என பலரும் ரெயில் நிலையம் வந்து இனிப்புகள் வழங்கியும் மாலை அணிவித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வீராங்கனைகள், 'இறுதிப்போட்டியுடன் சேர்த்து மொத்தம் 10 போட்டிகளில் ஆடியதாகவும், லீக் போட்டி முதல் அனைத்து போட்டிகளிலும் அதிக கோல்கள் அடித்து வெற்றி பெற்றதாகவும் கூறினர்.


    ×