search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலி பெண் டாக்டர்"

    திருவள்ளூர் அருகே போலி பெண் டாக்டரை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த கூடப்பாக்கம் கிராமத்தில் அமுதா (வயது 48) என்பவர் கிளினிக் திறந்து கடந்த 3 ஆண்டுகளாக மருத்துவ சிகிச்சை அளித்து வந்தார்.

    இந்த நிலையில் அவர் பிளஸ்-2 வரை மட்டுமே படித்து விட்டு மருத்துவம் பார்ப்பதாக கிராம நிர்வாக அலுவலர் செல்வகுமாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அவர் வெள்ளவேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் கிளினிக்குக்கு சென்று அமுதாவிடம் விசாரணை நடத்தினார்கள். இதில் அவர் பிளஸ்-2 வரை மட்டுமே படித்து விட்டு மருத்துவம் பார்த்தது தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அமுதாவை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

    ×