search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போயிங் 737 மேக்ஸ் விமானங்கள்"

    எத்தியோப்பியா மற்றும் இந்தோனேசியாவில் நிகழ்ந்த கோர விபத்தைத் தொடர்ந்து, அழுத்தம் அதிகரித்த நிலையில், போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களை தரையிறக்க அமெரிக்காவும் உத்தரவிட்டுள்ளது. #Boeing737MAX8 #EthiopiaPlaneCrash #Boeing #FAA
    வாஷிங்டன்:

    எத்தியோப்பியாவில் ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானதில் இந்தியர்கள் உள்பட 157 பேர் உயிரிழந்தனர். இதே ரக விமானம் இந்தோனேசியாவில் கடந்த அக்டோபரில் விபத்துக்குள்ளானதில் 189 பேர் பலியாகினர்.
     
    இதனால், ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், இந்தியா, சீனா, எத்தியோப்பியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், கனடா உள்ளிட்ட நாடுகள் அந்த ரக விமானங்களை இயக்க தற்காலிக தடை விதித்துள்ளன. மேலும் சில நாடுகளும் விமான பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து வருகின்றன. எனவே, போயிங் நிறுவனத்துக்கும், அமெரிக்க அரசுக்கும் அழுத்தம் அதிகரித்தது.

    ஆனால், உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முதற்கட்ட ஆய்வில், ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானத்தில் செயல்திறன் குறைபாடுகள் கண்டறியப்படவில்லை என்றும், விமானங்களை தரையிறக்குவதற்கு எந்த அடிப்படை முகாந்தரமும் இல்லை என்றும் அமெரிக்க விமான போக்குவரத்து கழகம் விளக்கம் அளித்தது.

    ஆனால், பாதுகாப்பு குறைபாடு தொடர்பான சந்தேகங்களும், அச்சமும் விமான நிறுவனங்களிடம் எழுந்தது. எனவே கடும் அழுத்தங்களைத் தொடர்ந்து, போயிங் 737 மேக்ஸ் 8 மற்றும் போயிங் 737 மேக்ஸ் 9 ரக விமானங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. இந்த அறிவிப்பை அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ளார்.

    இந்தோனேசியாவில் நடைபெற்ற விமான விபத்துக்கும், எத்தியோப்பியா விமான விபத்துக்கும் ஒற்றுமைகள் தென்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், போயிங்737 மேக்ஸ் ரக விமானங்கள் வாங்குவதற்கான உத்தரவையும் அமெரிக்க விமான போக்குவரத்து நிர்வாகம் ரத்து செய்துள்ளது.

    அமெரிக்காவில் மொத்தம் 74 ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன. பெரும்பாலும் யுனைட்டெட் ஏர்லைன்ஸ், அமெரிக்கன் ஏர்லைன்ஸ் மற்றும் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் இந்த விமானங்களை இயக்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. #Boeing737MAX8 #EthiopiaPlaneCrash #Boeing #FAA
    சீனா, எத்தியோப்பியா, சிங்கப்பூரை தொடர்ந்து அமெரிக்காவிலும் ‘போயிங் 737 மேக்ஸ் 8’ விமானங்கள் தடைவிதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. #Boeing737MAX8
    வாஷிங்டன்:

    எத்தியோப்பியா ஏர்லைன்சுக்கு சொந்தமான ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானதில் இந்தியர்கள் உள்பட 157 பேர் உயிரிழந்தனர். இதே ரக விமானம் இந்தோனேசியாவில் கடந்த அக்டோபரில் விபத்துக்குள்ளானதில் 189 பேர் பலியாகினர்.

    இதனால், ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்ததால் சீனா, எத்தியோப்பியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் அந்த ரக விமானங்களை இயக்க தற்காலிக தடை விதித்துள்ளது. இந்தநிலையில், ‘போயிங் 737 மேக்ஸ் 8’ விமானங்களில் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை இருப்பதை விமானப் போக்குவரத்து நிர்வாகம் கண்டறிந்தால், உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்காவின் மத்திய விமான போக்குவரத்துறை தெரிவித்துள்ளது.

    எனவே சீனா, எத்தியோப்பியா, சிங்கப்பூரை தொடர்ந்து அமெரிக்காவிலும் ‘போயிங் 737 மேக்ஸ் 8’ விமானங்கள் தடைவிதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.  #Boeing737MAX8 
    157 உயிர்களை பறித்த எத்தியோப்பியா விமான விபத்தை தொடர்ந்து தங்களது வான்எல்லையில் போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானங்களை இயக்க இந்தியாவும் தற்காலிக தடை விதித்துள்ளன. #Boeing737MAX8 #IndiabansBoeing737MAX8
    புதுடெல்லி:

    எத்தியோப்பியா நாட்டின் தலைநகரான அடிஸ் அபாபா நகரில் இருந்து கென்யா தலைநகர் நைரோபி நோக்கிச் சென்ற எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் விமானம் சமீபத்தில் விழுந்து நொறுங்கிய விபத்தில் 8 இந்தியர்கள் உள்பட 157 பேர் உயிரிழந்ததையடுத்து, விபத்துக்குள்ளான போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானங்களை தரையிறக்கி நிறுத்தி வைக்க சீன அரசு உத்தரவிட்டுள்ளது.

    சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட மேலும் சில நாடுகள் இந்த முடிவுக்கு வந்துள்ளன. இந்நிலையில், தங்களது வான்எல்லையில் போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானங்களை இயக்க மலேசியா அரசு தடை விதித்துள்ளது.

    இதேபோல் பிரிட்டன் அரசும் தங்கள் நாட்டுக்குட்பட்ட வான்எல்லைக்குள் போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானங்களை இயக்க நேற்று முதல் தடை விதித்தது.

    இந்நிலையில் தங்கள் நாட்டுக்குட்பட்ட வான்எல்லையில் போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானங்களை இயக்க இந்தியாவில் தற்காலிகமாக இயக்க தடைவிதித்துள்ளதாக இந்திய விமான போக்குவரத்து இயக்ககம் செய்தி வெளியிட்டுள்ளது.



    சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட  பல நாடுகள் எடுத்துள்ள இந்த நடவடிக்கையால் பங்கு சந்தையில் போயிங் நிறுவனத்தின் பங்குகள் சரிவை சந்தித்தன. திங்கள் அன்று 4.8% அளவுக்கும், செவ்வாய் அன்று 5 % அளவுக்கும் போயிங் நிறுவன பங்குகள் சரிந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    முன்னதாக, போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானத்தில் உலகில் உள்ள பல நாடுகளின் விமானச்சேவை நிறுவனங்கள் இந்த விமானங்களை வாங்க ஏராளமான அளவில் ஆர்டர் செய்துள்ளது, குறிப்பிடத்தக்கது. #Boeing737MAX8 #EthiopianFlightCrash  #IndiabansBoeing737MAX8
    157 உயிர்களை பறித்த எத்தியோப்பியா விமான விபத்தை தொடர்ந்து தங்களது வான்எல்லையில் போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானங்களை இயக்க மலேசியா, பிரிட்டன் அரசுகள் தடை விதித்துள்ளன. #Boeing737MAX8 #MalaysiabansBoeing737MAX8

    எத்தியோப்பியா நாட்டின் தலைநகரான அடிஸ் அபாபா நகரில் இருந்து கென்யா தலைநகர் நைரோபி நோக்கிச் சென்ற எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் விமானம் சமீபத்தில் விழுந்து நொறுங்கிய விபத்தில் 8 இந்தியர்கள் உள்பட 157 பேர் உயிரிழந்ததையடுத்து, விபத்துக்குள்ளான போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானங்களை தரையிறக்கி நிறுத்தி வைக்க சீன அரசு உத்தரவிட்டுள்ளது. 



    சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட மேலும் சில நாடுகள் இந்த முடிவுக்கு வந்துள்ளன. இந்நிலையில், தங்களது வான்எல்லையில் போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானங்களை இயக்க மலேசியா அரசு தடை விதித்துள்ளது.

    இதேபோல் பிரிட்டன் அரசும் தங்கள் நாட்டுக்குட்பட்ட வான்எல்லைக்குள் போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானங்களை இயக்க இன்றுமுதல் தடை விதித்துள்ளது.

    முன்னதாக, போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானத்தில் உலகில் உள்ள பல நாடுகளின் விமானச்சேவை நிறுவனங்கள் இந்த விமானங்களை வாங்க ஏராளமான அளவில் ஆர்டர் செய்துள்ளது, குறிப்பிடத்தக்கது. #Boeing737MAX8 #EthiopianFlightCrash  #MalaysiabansBoeing737MAX8 
    எத்தியோப்பியா நாட்டில் 8 இந்தியர்கள் உள்பட 157 பேர் இறப்புக்கு காரணமான விமான விபத்தின் எதிரொலியாக இந்தியாவிடம் உள்ள போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானங்களின் நிலை என்ன? என தெரிவிக்கப்பட்டுள்ளது. #Boeing737MAX8 #EthiopianFlightCrash #Spicejet #Jetairways
    புதுடெல்லி:

    எத்தியோப்பியாவில் நிகழ்ந்த கோரமான விமான விபத்தில் 157 பேர் உயிரிழந்ததையடுத்து, விபத்துக்குள்ளான ரகமான போயிங் 737 மேக்ஸ்-8  விமானங்களை தரையிறக்கி நிறுத்தி வைக்க சீன அரசு உத்தரவிட்டுள்ளது. சிங்கப்பூர் உள்ளிட்ட மேலும் சில நாடுகள் இந்த முடிவுக்கு வந்துள்ளன.



    முன்னதாக, போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானத்தில் உலகில் உள்ள பல நாடுகளின் விமானச்சேவை நிறுவனங்கள் இந்த விமானங்களை வாங்க ஏராளமான அளவில் ஆர்டர் செய்துள்ளன.

    இதற்கிடையில், இந்தியாவில் இயக்கப்படும் போயிங் 737 மேக்ஸ்-8 ரக  விமானங்களுக்கு தடை விதிக்க வேண்டுமா? என்பது குறித்து விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையத்துடன் ஆலோசனை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    இந்தியாவில் அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்திடம் 737 மேக்ஸ்-8 ரக விமானங்கள் இல்லை. எனினும், இத்தகைய விமானங்களை வைத்திருக்கும் தனியார் நிறுவனங்கள் உரிய பரிசோதனைகளை எல்லாம் முறைப்படி கடைபிடித்த பின்னரே விமானங்களை இயக்க வேண்டும் என விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

    இந்நிலையில், 737 மேக்ஸ்-8 ரக விமானங்களை வைத்திருக்கும் தனியார் நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் தங்களிடம் இந்த ரகத்தை சேர்ந்த 5 விமானங்கள் இருப்பதாகவும், அவை அனைத்தும் இயக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் இன்று தெரிவித்துள்ளது.

    குறைபாடுகள் ஏதுமிருப்பின் அவற்றை நிவர்த்தி செய்வது தொடர்பாக போயிங் நிறுவனத்திடமும், விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையத்துடனும் தொடர்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானங்கள் மிகவும் மேம்படுத்தப்பட்ட அதிநவீன தொழில்நுட்பம் கொண்டவை. உலகளாவிய அளவில் பல ஆயிரம் மணிநேரம் இந்த விமானங்கள் இதற்கு முன்னர் பறந்துள்ளன. உலகில் உள்ள மிகப்பெரிய விமான சேவை நிறுவனங்கள் எல்லாம் இந்த ரகத்தை சேர்ந்த விமானங்களை தொடர்ந்து இயக்கி வருகின்றன.

    எப்போதும்போல் பயணிகளின் பாதுகாப்பை முன்னிறுத்தி, விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்ட அறிவுறுத்தலின்படி பல்வேறு வகையான கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன’ என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.  #Boeing737MAX8 #EthiopianFlightCrash #Spicejet #Jetairways
    ×