search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போக்குவரத்துக்கு இடையூறாக"

    • வியாபாரிகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை
    • மாற்று இடம் வழங்க வலியுறுத்தல்

    காவேரிப்பாக்கம்;

    ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த கீழ்வீதி ஊராட்சியில் வாரந்தோறும் திங்கட்கிழமை சந்தை நடைபெற்று வருகிறது.

    இந்த சந்தைக்கு பெரப்பேரி, கோடம்பாக்கம், உளியநல்லூர், மேலேரி, வெளிதாங்கிபுரம், கீழ்களத்தூர், செல்வமந்தை ஆகிய கிராமங்களிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து காய்கறிகள் வாங்கி செல்கின்றனர்.

    இந்நிலையில் சந்தையானது பாணாவரம் செல்லும் சாலை ஓரத்திலே இருப்பதால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் விபத்தும் ஏற்படுகிறது.

    இதனால் சந்தையை மாற்று இடத்தில் அமைக்க வேண்டும் என நெமிலி சப்-இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவிலு வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

    அப்போது கீழ்வீதி ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தி செல்வம் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் வியாபாரத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு சந்தைக்கு மாற்று இடம் வழங்க வழிவகை செய்யப்படும் என்று வியாபாரிகளிடம் கூறினார்.

    • ஜவஹர் பஜாரில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுகிறது
    • பொதுமக்கள் கடும் அவதி

    கரூர்:

    தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், கரூர், ஜவஹர் பஜார் மற்றும் கோவை சாலையில் போக்குவ ரத்துக்கு இடையூறாக. வாகனங்கள் நிறுத்தப்படுவதால், பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    கரூர் நகரின் மையப் பகுதியாக உள்ள ஜவஹர் பஜாரில், ஏராளமான துணிக் கடைகள், நகை கடைகள், தாலுகா அலுவலகம், கிளைச்சிறை, மையம், வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

    போக்குவரத்துக்கு இடையூறாக

    தினமும் காலை, 8 மணி முதல் இரவு 9 மணி வரை, கரூர், ஜவஹர் பஜாரில் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் இருக்கும். இந்நிலையில் வரும் 24 -ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்காக, புத்தாடைகள், நகைகள் மற்றும் பல்வேறு வீட்டு உபயோக பொருட்கள் வாங்க நாள்தோறும் கரூர்மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், கரூர், ஜவஹர் பஜார் பகுதிக்கு வந்து செல்கின்றனர்.

    இங்குள்ள வர்த்தக நிறுவனங்களுக்கு வருகிறவர்கள் தங்களது கார், டூவிலர் உள்ளிட்ட வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறாக, இஷ்டத்துக்கு நிறுத்திவிட்டு பொருட்கள் வாங்க சென்றுவிட்டு, பல மணி நேரத்துக்குப் பிறகு வருகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, மற்ற வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர்.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஏற் படும் கூட்ட நெரிசலை பயன்படுத்தி, பொது மக்களிடமிருந்து பணம், கொள்ளை யர்கள் பறித்து செல்ல வாய்ப்பு உண்டு. எனவே, கரூர், ஜவஹர் பஜார். கோவை சாலையில் போக்குவரத்து பாதிக்கும் வகையில் வாகனங்கள் நிறுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    ×