என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "போக்குவரத்திற்கு இடையூறு"
- பொதுமக்கள் அச்சம்
- போலீசார் விசாரணை
செய்யாறு:
செய்யாறு டவுன் சேர்ந்தவர்கள் பாலா (வயது 19). 18 வயதுடைய சிறுவன். இவர்கள் 2 பேரும் நேற்று செய்யாறு பைபாஸ் சாலையில் நின்று கொண்டு போக்குவரத்திற்கும், பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தினர். இதனால் அந்த வழியாக சென்றவர்கள் அச்சமடைந்தனர்.
இது குறித்து செய்யாறு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்திய 2 பேரை பிடித்தனர்.
போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் போலீசார் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதால் நடவடிக்கை
- போலீசார் விசாரணை
செய்யாறு:
செய்யாறு டவுன், புது தெருவை சேர்ந்தவர் சந்துரு (வயது 30), இவர் செய்யார் டவுன், கண்ணியம் நகர் சந்திப்பில் காஞ்சிபுரம் சாலையில் பொது மக்களுக்கும், போக்கு வரத்துக்கும் இடையூறு செய்ததாக செய்யாறு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்துக்கு விரைந்து ெசன்று சந்துருவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போன்று வெம்பாக்கம் அடுத்த மாமண்டூர் கிராமம், ரோட்டு தெருவை சேர்ந்த கார்த்திகேயன் (39), என்பவர் புதுப்பாளையம் கூட் ரோட்டில் பொது மக்களுக்கு இடையூறு செய்து ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்தார். இவரை தூசி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போக்குவரத்திற்கு இடையூறு செய்ததால் நடவடிக்கை
- போலீசார் விசாரணை
செய்யாறு:
செய்யாறு டவுன், காஞ்சிபுரம் சாலையிலும், ஆற்காடு சாலையிலும் தூசி காவல் நிலையத்துக்கு உட்பட்ட மாங்காலிலும், பெரணமல்லூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட முனுகப்பட்டு கிராமத்திலும் 4 வாலிபர்கள் போக்குவரத்திற்கு இடையூறு செய்தும், அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் ரகளை செய்வதாக போலீசுக்கு வந்த தகவலின் பேரில் 4 வாலிபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டனர்.
போலீஸ் விசாரணையில் அந்த வாலிபர்கள் செய்யாறு கண்ணியம் நகரை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது.
இதே போல் மோரணம் பகுதியில் கஞ்சா விற்ற வாலிபர் ஒருவரை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்