என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரகளையில் ஈடுபட்ட 4 வாலிபர்கள் கைது
- போக்குவரத்திற்கு இடையூறு செய்ததால் நடவடிக்கை
- போலீசார் விசாரணை
செய்யாறு:
செய்யாறு டவுன், காஞ்சிபுரம் சாலையிலும், ஆற்காடு சாலையிலும் தூசி காவல் நிலையத்துக்கு உட்பட்ட மாங்காலிலும், பெரணமல்லூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட முனுகப்பட்டு கிராமத்திலும் 4 வாலிபர்கள் போக்குவரத்திற்கு இடையூறு செய்தும், அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் ரகளை செய்வதாக போலீசுக்கு வந்த தகவலின் பேரில் 4 வாலிபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டனர்.
போலீஸ் விசாரணையில் அந்த வாலிபர்கள் செய்யாறு கண்ணியம் நகரை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது.
இதே போல் மோரணம் பகுதியில் கஞ்சா விற்ற வாலிபர் ஒருவரை கைது செய்தனர்.
Next Story






