search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொள்ளாச்சி பாலியல் புகார்"

    பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தை கண்டித்து தேனியில் ஆர்ப்பாட்டம் நடத்திய அரசு ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #PollachiAbuseCase
    தேனி:

    பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமைக்கு எதிராக தமிழகம் முழுவதும் மாணவர்கள் மற்றும் தன்னார்வ அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரக்கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

    தேனி - அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் முகமது அலி ஜின்னா தலைமையில் நிர்வாகிகள் ஞான திருப்பதி, அன்பழகன், உடையாளி, பாலமுருகன், கிருஷ்ணசாமி உள்பட அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால் அனுமதி இல்லாமல் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக வி.ஏ.ஓ. குமரேசன் தேனி போலீசில் புகார் அளித்தார். அதன்படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #PollachiAbuseCase
    பொள்ளாச்சி பாலியல் புகார் தொடர்பாக சிபிசிஐடி போலீசாருக்கு இதுவரை 100-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளது. #PollachiAbuseCase #PollachiCase
    கோவை:

    பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் எனவும் புகார் தெரிவிப்பவர்கள் பெயர், விவரம் ரகசியம் காக்கப்படும் எனவும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்து இருந்தனர்.

    புகார் தெரிவிக்க 94884-42993 என்ற எண்ணையும் தெரிவித்து இருந்தனர். இந்த எண் அறிவிக்கப்பட்ட சில மணி நேரத்திலே ஏராளமான புகார்கள் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு வந்தது.

    இது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் கூறும்போது நேற்று தான் புகார் தெரிவிக்க செல்போன் எண் கொடுத்து இருந்தோம். அதற்குள் 100-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்து விட்டது.

    அவர்கள் பாலியல் பலாத்கார கும்பல் மீது பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றனர் என்றனர். #PollachiAbuseCase #PollachiCase

    ×