search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேராலய திருவிழா"

    • 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
    • டிசம்பர் மாதம் 4-ந்தேதி 11-ம் நாள் திருவிழாவுடன் நிறைவு பெறுகிறது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற கத்தோலிக்க தேவாலயங்களில் ஒன்றாகவும், கோட்டார் மறை மாவட்டத்தின் தலைமை பேராலயமாகவும் விளங்குவது நாகர்கோவில் கோட்டாரில் அமைந்துள்ள புனித சவேரியார் பேரால யம் ஆகும். ஆண்டுதோறும் இந்த பேராலயத்தின் திருவிழா நவம்பர் மாதம் இறுதியில் தொடங்கி, டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் நிறைவுபெறும்.

    இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 24-ந்தேதி தொடங்குகிறது. இதுகுறித்து பேராலய பங்குத்தந்தை பஸ் காலிஸ், உதவி பங்குத்தந்தை ஜெனிஷ் கவின் ஆகியோர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதா வது:-

    கேட்டவரம் தரும் கோட்டார் புனித சவேரியார் பேராலயம், உலகில் புனித சவேரியாருக்கென்று முதன் முதலாக எழுப்பப்பட்ட ஆலயம் ஆகும்.

    போர்த்துக்கீசிய மன்னரின் ஆளுகைக்குட்பட்ட இந்தியாவின் சில பகுதிகளுக்கு மறைதூது அருட்பணியாளர்கள் தேவைப்பட்டனர். புனித சவேரியார் இந்தியாவில் மறைதூது பணி செய்ய அனுப்பப்பட்டார். குமரி மாவட்டத்தில் கோட்டாருக்கு வந்த சவேரியார் இந்த பகுதியில் சுற்றி வந்து, மக்களை சந்தித்து மக்களின் அன்றாட வாழ்வோடு இணைந்தார். இவர் சாதி, சமய பேதமின்றி அனைத்து மக்களுக்கும் நற்செய்தி பணியாற்றினார்.

    கோட்டார் பேரால யத்துக்கு இன்னும் ஒரு சிறப்பு உண்டு. மறை சாட்சி தேவசகாயம் பிள்ளையின் கல்லறை அமைந்துள்ளது. இங்குதான் புனித சவேரி யார் தங்கியிருந்து திருப்பலி நிறைவேற்றினார். அவர் தங்கியிருந்து, அருட்பணி யாற்றிய இந்த புண்ணிய பூமியில் வருகிற 24-ந்தேதி (வெள்ளிக்கிழமை) பேராலய 11 நாள் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 6.15 மணி திருப்பலியை ராஜாவூர் பங்கு இறை மக்களும், 8 மணி திருப்பலியை அருகுவிளை பங்கு இறை மக்களும் நிறைவேற்றுகிறார்கள். மாலை 6 மணிக்கு கொடியேற்ற நிகழ்ச்சி நடக்கிறது.

    கோட்டார் மறைமாவட்ட முதன்மை அருட்பணியாளர் ஜான் ரூபஸ் தலைமை தாங்கி கொடியேற்றி வைக்கிறார். முதல் நாள் நிகழ்ச்சியை குமரி மாவட்ட போலீஸ் துறையினர் சிறப்பிக்கிறார்கள்.

    3-ம் நாள் திருவிழாவான 26-ந்தேதி காலை 8.30 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலியும், 11 மணிக்கு இறை இரக்க தூதுவர் குழுவினரின் குணமளிக்கும் திருப்பலியும் நடைபெறுகிறது. 9-ம் நாள் திருவிழாவான டிசம்பர் மாதம் 2-ந்தேதியன்று மாலை 6.30 மணிக்கு ஆடம்பர கூட்டுத்திருப்பலி முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் நடக்கிறது. அன்று இரவு 10.30 மணிக்கு தேர்ப்பவனி நடைபெறும். 10-வது நாளான 3-ந்தேதி மாலை 6.30 மணிக்கு சிறப்பு மாலை ஆராதனை, நற்கருணை ஆசீர் நடக்கிறது. இதற்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி, மறையுரை ஆற்றுகிறார். இரவு 10.30 மணிக்கு தேர்ப்பவனி நடைபெறும். 11-ம் நாள் திருவிழாவான 4-ந்தேதி காலை 6 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் பெருவிழா திருப்பலி நடக்கிறது. அன்று காலை 11 மணிக்கு தேர்ப்பவனியும், இரவு 7 மணிக்கு தேரில் ஆடம்பர கூட்டுத்திருப்பலியும் நடைபெறும்.

    டிசம்பர் மாதம் 4-ந்தேதி 11-ம் நாள் திருவிழாவுடன் நிறைவு பெறுகிறது. அன்றைய தினத்தில் குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்க மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். கலெக்டரால் அன்றைய தினம் உள்ளூர் விடுமுறையாக அனுமதித்து அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.

    திருவிழா முடிந்த பிறகு 8-ந்தேதி மாலை 6 மணிக்கு கொடியிறக்க நிகழ்வும், புனித இஞ்ஞாசியார், புனித சவேரியார், புனித தேவசகாயம் ஆகியோரின் திருப்பண் பவனி, திருப்பண் டம் முத்தம் செய்தல் மற்றும் நற்கருணை ஆசீர் நடைபெறும். தொடர்ந்து அன்பின் விருந்து நடைபெ றும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    பேட்டி யின் போது கோட்டார் பங்குப்பே ரவை துணை தலைவர் ஜேசு ராஜா, செயலாளர் ராஜன், துணை செயலாளர் ராஜன் ஆராச்சி, பொருளாளர் ஜார்ஜ் பிரகாஷ் ராபின் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • தூய இருதய ஆண்டவர் பேராலய பங்குத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • தினமும் தூய இருதய ஆண்டவர் தேர் பவனியும், சிறப்பு திருப்பலியும் நடக்கிறது.

    தருமபுரி,

    தருமபுரி பாரதிபுரத்தில் உள்ள தூய இருதய ஆண்டவர் பேராலய பங்குத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி பேராலத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பின்னர் மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் கொடியை ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்தப் பங்கு திருவிழா வருகிற 17-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவையொட்டி தினமும் தூய இருதய ஆண்டவர் தேர் பவனியும், சிறப்பு திருப்பலியும் நடக்கிறது.

    வருகிற 16-ம் தேதி திருவிழா சிறப்பு திருப்பலியும், சிறப்பு தேர் பவணியும், நற்கருணை ஆசீர் வழங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. வருகிற 17-ம் தேதி நன்றி திருப்பலியும், கொடி இறக்கும் விழாவும் நடக்கிறது.

    இதில் தருமபுரி மறை மாவட்ட ஆயர் தலைமையில் பல்வேறு கிறிஸ்துவ அமைப்புகளின் நிர்வாகிகளும், ஆயர் இல்ல செயலர், தருமபுரி சமூக சேவை இயக்குனர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

    இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தைகள் மற்றும் பேராலய நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

    ×