என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தருமபுரியில் தூய இருதய ஆண்டவர் பேராலய திருவிழா
- தூய இருதய ஆண்டவர் பேராலய பங்குத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- தினமும் தூய இருதய ஆண்டவர் தேர் பவனியும், சிறப்பு திருப்பலியும் நடக்கிறது.
தருமபுரி,
தருமபுரி பாரதிபுரத்தில் உள்ள தூய இருதய ஆண்டவர் பேராலய பங்குத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி பேராலத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பின்னர் மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் கொடியை ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
இந்தப் பங்கு திருவிழா வருகிற 17-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவையொட்டி தினமும் தூய இருதய ஆண்டவர் தேர் பவனியும், சிறப்பு திருப்பலியும் நடக்கிறது.
வருகிற 16-ம் தேதி திருவிழா சிறப்பு திருப்பலியும், சிறப்பு தேர் பவணியும், நற்கருணை ஆசீர் வழங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. வருகிற 17-ம் தேதி நன்றி திருப்பலியும், கொடி இறக்கும் விழாவும் நடக்கிறது.
இதில் தருமபுரி மறை மாவட்ட ஆயர் தலைமையில் பல்வேறு கிறிஸ்துவ அமைப்புகளின் நிர்வாகிகளும், ஆயர் இல்ல செயலர், தருமபுரி சமூக சேவை இயக்குனர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தைகள் மற்றும் பேராலய நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்