search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெருந்தலைவர் மக்கள் கட்சி"

    • கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவர் எஸ்.எஸ்.ஆர்.சசிகுமார், செயலாளர் சங்கர், அவைத்தலைவர் பெருமாள், இளைஞரணி தலைவர் வடிவேல் முன்னிலை வகிக்கிறார்கள்.
    • மாவட்ட வர்த்தக அணித்தலைவர் நக்கீரன் வரவேற்று பேசுகிறார். மாநில செயலாளர் ஆசைத்தம்பி தொடக்கஉரையாற்றுகிறார்.

    சென்னை:

    பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகிற 14-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு கள்ளக்குறிச்சி கிராம சாவடி தெருவில் உள்ள கே.வி.எம்.திருமண மாளிகையில் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன் தலைமையில் நடக்க உள்ளது.

    கூட்டத்திற்கு கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவர் எஸ்.எஸ்.ஆர்.சசிகுமார், செயலாளர் சங்கர், அவைத்தலைவர் பெருமாள், இளைஞரணி தலைவர் வடிவேல் முன்னிலை வகிக்கிறார்கள். மாவட்ட வர்த்தக அணித்தலைவர் நக்கீரன் வரவேற்று பேசுகிறார். மாநில செயலாளர் ஆசைத்தம்பி தொடக்கஉரையாற்றுகிறார்.

    தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், மாநில, மாவட்ட, தொகுதி, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள். பொதுக்குழுவில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. கள்ளக்குறிச்சி நகர தலைவர் எஸ். செல்வன் நன்றி கூறுகிறார்.

    ×