search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெரம்பலூர் அரசு மருத்துவமனை"

    பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் உலக செவிலியர் தினம் செவிலியர்களால் கொண்டாடப்பட்டது.
    பெரம்பலூர்:

    மக்கள் நல்வாழ்வுக்காக இரவு, பகல், பண்டிகை நாட்கள் பாராமல் அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய செவிலியர் சேவை புரிந்து வரும் செவிலியர்களின் பங்களிப்பு வெகுவாக பாராட்டத்தக்கது. இங்கிலாந்து நாட்டில் செல்வ செழிப்புமிக்க குடும்பத்தில் 12–5–1820–ம் ஆண்டு பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்தார். அவர் செவிலியர் சேவையை தன் பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக அப்பணியில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அவர் பிறந்த மே 12–ம் நாள் உலக செவிலியர் தினமாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன்படி நேற்று பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. பின்னர் மருத்துவமனையில் உள்ள டாக்டர்கள், ஊழியர்கள், நோயாளிகள், நோயாளிகளின் உறவினர்களுக்கு செவிலியர்கள் இனிப்பு கொடுத்தனர்.

    அவர்கள் செவிலியர்களுக்கு, செவிலியர் தின வாழ்த்துக்களை கூறினர். எதிர்காலத்தில் செவிலியர் ஆக உள்ள மருத்துவமனையில் பயிற்சி பெறும் செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள், செவிலியர்களுக்கு கை கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் செவிலியர்கள் ஒருவருக்கொருவர் கை கொடுத்தும், கட்டி அரவணைத்தும் செவிலியர் தின வாழ்த்துக்களை கூறி பரிமாறி கொண்டனர். சில செவிலியர்கள் ஒன்று சேர்ந்து தங்களது செல்போனில் ‘செல்பி‘ எடுத்து கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்னர் செவிலியர்கள் கட்டை விரலை உயர்த்தி தங்கள் இலக்கினை அடைவோம் என்று உறுதி எடுத்து கொண்டனர். சமூக வலைத்தளங்களான பேஸ்புக், வாட்ஸ்–அப் ஸ்டேட்டஸ்களில் சிலர் செவிலியர்களை என்னை பெற்றெடுத்த தாய் அரவணைக்கும் முன்பே என்னை அரவணைத்த தெய்வங்கள் என்று வாழ்த்தி பதிவிட்டிருந்தனர்.

     பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அரசு செவிலியர்கள், பயிற்சி செவிலியர்கள் என 200–க்கும் மேற்பட்டோர் காலை, மதியம், இரவு ஆகிய 3 வேளைகளில் சுழற்சி முறையில் பணிபுரிந்து நோயாளிகளுக்கு சேவையாற்று வருகின்றனர். மனம் கோணாது சேவையில் சிறந்து விளங்கும் செவிலியரை இன்னொரு தாய் என்று சொல்வது அர்த்தம் உள்ளதாகவே இருக்கும்.

    இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உலக செவிலியர் தினம் கொண்டாட்டப்பட்டது.
    உலக புற்றுநோய் தினத்தை யொட்டி பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    பெரம்பலூர்:

    உலக புற்றுநோய் தினத்தையொட்டி பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதற்கு தொற்றா நோய் பிரிவு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் விவேகானந்தன் தலைமை தாங்கினார். அரசு மருத்துவமனை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சரண்யா புற்றுநோய் குறித்தும், வாய் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை, மார்பக புற்றுநோய் குறித்தும், புற்றுநோய் வராமல் தடுப்பது குறித்தும் பெண்களிடையே விளக்கி பேசினார். 

    இதில் காது, மூக்கு, தொண்டை பிரிவு டாக்டர் அன்பரசு, டாக்டர் சூர்யபிரபா, செவிலியர் கண்காணிப்பாளர் மல்லிகா உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    விஷ காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
    பெரம்பலூர்:

    தமிழகத்தில் தற்போது டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா வி.களத்தூர் ராயபுரத்தை சேர்ந்த முனியமுத்து மகன் தஷ்வின் (வயது 4) என்ற சிறுவன், கடந்த சில நாட்களாக விஷ காய்ச்சலால் பாதிக்கப்பட்டான். இதனால் பதறிப்போன முனியமுத்து, தஷ்வினை அதே பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு சிறுவனுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், அவனுக்கு விஷ காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். பின்னர் அவன் நேற்று முன்தினம் இரவு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு அவனுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதேபோல, பெரம்பலூர், குன்னம், வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஆகிய 4 தாலுகாக்களை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் விஷ காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தனி வார்டு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர் களுக்கு டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி இருக்கிறதா? என பரிசோதனை செய்து, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பலர் வெளிநோயாளியாக சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

    கொசுக்கள் கடிப்பதால்தான் காய்ச்சல் ஏற்படுகிறது. ஆகவே, கொசுக்கள் உற்பத்தியாகாதவாறு பொதுமக்கள் தங்களது வீடு மற்றும் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீரை காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும் என்று நோயாளிகளிடம் டாக்டர்கள் அறிவுரை கூறி வருகின்றனர்
    பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தினை சேர்ந்த டாக்டர்கள் நேற்று மதியம் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    பெரம்பலூர்: 

    மத்திய அரசு டாக்டர்களுக்கு வழங்கும் ஊதியத்திற்கு இணையாக, தமிழக அரசு டாக்டர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தினை சேர்ந்த டாக்டர்கள் சென்னையில் நேற்று முன்தினம் முதல் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதில் 5 டாக்டர்கள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

    இந்நிலையில் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தியும், போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தினை சேர்ந்த டாக்டர்கள் நேற்று மதியம் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

    ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் டாக்டர் அறிவழகன் தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர்கள் டாக்டர்கள் செந்தில்குமார், ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட டாக்டர்கள் கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதில் பொருளாளர் தனபால், அமைப்பு செயலாளர் அன்பரசு உள்பட டாக்டர்கள் பலர் கலந்து கொண்டனர். 
    ×