search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெயரை மாற்றம்"

    மேற்கு வங்காள மாநிலத்தின் பெயரை பங்களா என மாற்ற வேண்டும் என்ற மம்தா கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்தது. #WestBengal #MamataBanerjee #NameChange
    புதுடெல்லி:

    மேற்கு வங்காள மாநிலத்தின் பெயரை பங்களா என மாற்ற வேண்டும் என்று, அந்த மாநிலத்தை ஆளுகிற மம்தா பானர்ஜி அரசு விரும்புகிறது. இது தொடர்பான கோரிக்கையை, மாநில சட்டசபையில் தீர்மானமாக நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. ஆனால் அதை மத்திய அரசு நிராகரித்து விட்டது.

    அண்டை நாடான வங்காள தேசத்தின் பெயரைப் போன்று இருப்பதால் பங்களா என்ற பெயர் நிராகரிக்கப்பட்டு அந்த கோப்பு, மாநில அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகின்றன. மேற்கு வங்காள மாநில பாரதீய ஜனதா கட்சி, அந்த மாநிலத்தின் பெயரை பச்சிம்வங்கா என மாற்ற ஆதரவு அளிக்கிறது. அந்த மாநிலத்தின் பெயரை மாற்றுவதற்கு மம்தா பானர்ஜி அரசு, 2011, 2016 இப்போது 2018 என மூன்று முறை முயற்சித்தும், மத்திய அரசை நாடியும், அவரது முயற்சி வெற்றி பெறவில்லை.



    முதலில் அவர் 2011-ம் ஆண்டு பச்சிம்வங்கா என பெயர் மாற்றம் செய்ய மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசை நாடினார். அது நிராகரிக்கப்பட்டது. 2016-ம் ஆண்டு மாநிலத்தின் பெயரை ஆங்கிலத்தில் பெங்கால், வங்காள மொழியில் பங்களா, இந்தியில் பங்கால் என்று மாற்றிக்கொள்ள அனுமதி கோரி நிராகரிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக மேற்கு வங்காள பாரதீய ஜனதா கட்சி தலைவர் திலீப் கோஷ் கருத்து தெரிவிக்கையில், “ மாநிலத்தின் பெயரை மாற்ற வேண்டுமானால் பச்சிம்வங்கா என்றுதான் மாற்ற வேண்டும். வேறு பெயர் மாற்றினால் குழப்பமே மிஞ்சும்” என கூறி உள்ளார். 
    புழல் சிறையில் உள்ள கைதி ஒருவரை ஜாமீனில் விடுவிப்பதற்காக வந்த கடிதத்தில் முகமதுஷெரீப் தனது பெயரை மாற்றி தப்பியது தற்போது தெரியவந்துள்ளது. #PuzhalJail
    சென்னை:

    சென்னை அடையாறு பகுதியை சேர்ந்தவர் முகமதுஷெரீப் (வயது 27). வீடு புகுந்து திருடிய வழக்கில் கடந்த ஆகஸ்டு மாதம் 18-ந்தேதி முகமது ஷெரீப்பை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவன் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டான்.

    புழல் சிறையில் உள்ள ஜெயிலர் மற்றும் சப்-ஜெயிலரிடம் முகமது ஷெரீப் நன்றாக பழகினான். இதனால் அவனை உதவியாளர் போல அதிகாரிகள் வேலை வாங்கினர்.

    இந்த நிலையில் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த ஒரு கைதியை ஜாமீனில் விடுவிப்பதற்கான கடிதம் கடந்த 4-ந்தேதி ஜெயிலுக்கு வந்தது. அந்த கடிதத்தை முகமது ஷெரீப் வாங்கி அதிகாரிகளிடம் கொடுக்க சென்றார்.

    திடீரென்று முகமது ஷெரீப் கடிதத்தின் உறையில் இருந்த பெயரை நீக்கி தனது பெயரை மாற்றி எழுதி தன்னை ஜாமீனில் விட கடிதம் வந்துள்ளதாக அதிகாரிகளிடம் கொடுத்தான். அதிகாரிகளும் அதை சரியாக கவனிக்காமல் முகமது ஷெரீப்பை கடந்த 5-ந்தேதி வெளியே விட்டு விட்டனர்.

    இந்த நிலையில் முகமது ஷெரீப்பை ஜாமீனில் விடுவதற்கான கடிதம் ஜெயிலுக்கு வந்தது. அதன் பிறகே வேறொருவருக்கு வாங்கிய ஜாமீனில் முகமது ஷெரீப் தனது பெயரை மாற்றி தப்பியது தெரியவந்தது. இதனால் ஜெயிலில் பரபரப்பு ஏற்பட்டது. #PuzhalJail

    ×