search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் சாலை மறியல்"

    கீழ்பென்னாத்தூர் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் இன்று சாலை மறியல் செய்தனர்.

    கீழ்பென்னாத்தூர்:

    கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள கொளத்தூரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு கடந்த 3 மாதங்களாக குடிநீர் முறையாக வழங்கவில்லை. இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் 150-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் கீழ்பென்னாத்தூர் சானிப்பூண்டி சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவலறிந்த கீழ்பென்னாத்தூர் போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சம்பவ இடத்திற்கு வந்து பெண்களிடம் பேச்சுவார்தை நடத்தினர். அப்போது சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

    இதையடுத்து பெண்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    பள்ளிப்பட்டு அருகே குடிநீர் கேட்டு அப்பகுதி பெண்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் காலிகுடங்களுடன் பொதட்டூர்பேட்டை - நகர் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    பள்ளிப்பட்டு:

    பள்ளிப்பட்டு அருகே உள்ள பாண்டரவேடு பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

    இவர்களுக்கு கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். இதுகுறித்து பள்ளிப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இந்த நிலையில் குடிநீர் வழங்கக்கோரி அப்பகுதி பெண்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் காலிகுடங்களுடன் பொதட்டூர்பேட்டை - நகர் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதட்டூர் பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டீபன்ராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறி குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    ×