search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூமாதேவி"

    • அம்மா பூமாதேவி ஆலயம் சித்தர் பீடத்தில் சுயம்வர கலா பார்வதி கல்யாண சந்தான சவுபாக்கிய ஹோமம் நடைபெற்றது.
    • பூமாதேவி குருநாதர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு 21 வகையான கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகரில் பிரசித்தி பெற்ற அம்மா பூமாதேவி ஆலயம் சித்தர் பீடத்தில் சுயம்வர கலா பார்வதி கல்யாண சந்தான சவுபாக்கிய ஹோமம் நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருப்பள்ளியெழுச்சி பூஜை நடைபெற்றது. 6.45 மணிக்கு கணபதி பூஜை சங்கல்பம் கும்ப பூஜையும், 7.45மணிக்கு சுயம்வர கலா பார்வதி கல்யாண சந்தான சவுபாக்கிய ஹோமம், தீபாராதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து 8.45 மணிக்கு அம்பாள் பூமாதேவி குருநாதர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு 21 வகையான மஞ்சள், மாபொடி, திரவியம், பால், அன்னாபிஷேகம், சந்தனம், கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சோடனை தீபாராதனை நடைபெற்றது. லட்சுமணன் சுவாமி தலைமையில் ஆலய அர்ச்சகர் செல்வசுப்பிரமணியன் சங்கரன் குருக்கள் பூஜைகளை செய்தார்.

    இதில் ஜோதிடர்கள் சண்முகக்குமார், திருமேனி, பாக்கியராஜ், சுப்பாராஜ், சங்கரேஸ்வரி, மாரியப்பன், ஆறுமுகம், ஜெயராம்குமார், மகேந்திரன், மாரிஸ்வரன் விளக்கு பூஜை குழுவினர் மீனாட்சி இசக்கிமுத்து, மாரித்தாய், செல்வராணி மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை அம்மா பூமாதேவி ஆலய குழுவினர் செய்தனர்.

    • குரு பாத தரிசன லிங்கத்திற்கு 21 வகையான பூர்ண கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • பூமாதேவி ஆலய வளாகத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகரில் உள்ள சித்தர் பீடம் ஸ்ரீ அம்மா பூமாதேவி ஆலயத்தில் குரு பூஜை விழா நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருப்பள்ளியெழுச்சி பூஜை நடைபெற்றது. 5 மணிக்கு மகா கணபதி பூஜை, கும்ப பூஜை, கணபதி ஹோமம், குரு மூல மந்திர ஜெபம், புர்ணாகுதி நடைபெற்றது.

    ஸ்ரீ குரு பாத தரிசன லிங்கத்திற்கு 21 வகையான மாபொடி, மஞ்சள், திரவியம், பால், தேன் மற்றும் சந்தனம், பூர்ண கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு உண்பான் படைத்து சோடனை தீபாராதனையும் உச்சிகால பூஜையும் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு மேல் ஆலய வளாகத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    லட்சுமணன் சுவாமி தலைமையில் ஆலய அர்ச்சகர் செல்வசுப்பிரமணியன் பூஜைகளை செய்தார். இதில் சுப்பாராஜ், சங்கரேஸ்வரி, மாரியப்பன், ஆறுமுகம், லட்சுமணன், ராஜகந்தன், மந்திரமூர்த்தி, கோபால கிருஷ்ணன் திருவிளக்கு பூஜை குழுவினர் மீனாட்சி, பத்மாவதி, காந்திமதி, பூமாரி மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

    நிறைவாக பிரசாதம் வழங்கப்பட்டது. இவ்விழா ஏற்பாடுகளை ஸ்ரீ அம்மா பூமாதேவி ஆலய விழா குழுவினர் செய்திருந்தனர்.

    ×