என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பூமாதேவி ஆலயத்தில் சிறப்பு பூஜை
- அம்மா பூமாதேவி ஆலயம் சித்தர் பீடத்தில் சுயம்வர கலா பார்வதி கல்யாண சந்தான சவுபாக்கிய ஹோமம் நடைபெற்றது.
- பூமாதேவி குருநாதர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு 21 வகையான கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகரில் பிரசித்தி பெற்ற அம்மா பூமாதேவி ஆலயம் சித்தர் பீடத்தில் சுயம்வர கலா பார்வதி கல்யாண சந்தான சவுபாக்கிய ஹோமம் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருப்பள்ளியெழுச்சி பூஜை நடைபெற்றது. 6.45 மணிக்கு கணபதி பூஜை சங்கல்பம் கும்ப பூஜையும், 7.45மணிக்கு சுயம்வர கலா பார்வதி கல்யாண சந்தான சவுபாக்கிய ஹோமம், தீபாராதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து 8.45 மணிக்கு அம்பாள் பூமாதேவி குருநாதர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு 21 வகையான மஞ்சள், மாபொடி, திரவியம், பால், அன்னாபிஷேகம், சந்தனம், கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சோடனை தீபாராதனை நடைபெற்றது. லட்சுமணன் சுவாமி தலைமையில் ஆலய அர்ச்சகர் செல்வசுப்பிரமணியன் சங்கரன் குருக்கள் பூஜைகளை செய்தார்.
இதில் ஜோதிடர்கள் சண்முகக்குமார், திருமேனி, பாக்கியராஜ், சுப்பாராஜ், சங்கரேஸ்வரி, மாரியப்பன், ஆறுமுகம், ஜெயராம்குமார், மகேந்திரன், மாரிஸ்வரன் விளக்கு பூஜை குழுவினர் மீனாட்சி இசக்கிமுத்து, மாரித்தாய், செல்வராணி மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை அம்மா பூமாதேவி ஆலய குழுவினர் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்