search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புள்ளிமான் பலி"

    • கமுதி அருகே கம்பி வேலிகளுக்குள் சிக்கி புள்ளிமான் பலியானது.
    • அந்த பகுதியில் உள்ள நாய்கள் கூட்டமாக குரைத்தபடி மானை துரத்தியுள்ளன.

    பசும்பொன்

    கமுதி-குண்டாறு பகுயில் கருவேல மரங்கள் அடர்ந்துள்ளன. இந்த பகுதியில் ஏராளமான புள்ளிமான்கள், மயில்கள், அரிய வகை வெள்ளை மயில்கள் வசித்து வருகின்றன. ஆனால் தற்போது நிலவி வரும் கடுமையான வெயில் காரணமாக இந்த பகுதி தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது.

    இதனால் மான்கள், மயில்கள் தண்ணீரை தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் வருகின்றன. அங்கு சுற்றி திரியும் நாய்கள் அவைகளை துரத்தி கடித்து விடுகின்றன. இதனால் பல மயில்கள் மற்றும் மான்கள் இறந்து வருகின்றன.இந்த நிலையில் கமுதி-குண்டாறு கரை பகுதியில் சந்தன மாரியம்மன் கோவில் சுற்றுப்பகுதியில் விலங்கு கள் உள்ளே வராமல் தடுப்பதற்காக கம்பி வேலி போடப்பட்டுள்ளது. தண்ணீர் குடிப்பதற்காக அந்த பகுதிக்கு 7 வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளி மான் ஒன்று வந்துள்ளது.

    அந்த பகுதியில் உள்ள நாய்கள் கூட்டமாக குரைத்தபடி மானை துரத்தியுள்ளன. இதில் பதற்றம் அடைந்த புள்ளி மான் தப்பிப்பதற்காக வேகமாக ஓடி கம்பி வேலிகளுக்குள் சிக்கியது. அதில் இருந்து வெளி வர முடியாமல் பரிதாபமாக இறந்தது.இது குறித்து தகவல் அறிந்த கமுதி தீயணைப்பு நிலைய அலுவலர் சந்திர சேகரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த புள்ளி மானை மீட்டனர். பின்னர் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். பேரூராட்சி வாகனம் மூலம் உடற்கூறு ஆய்வுக்காக கோட்டை மேட்டில் உள்ள கால்நடை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    • பொதுமக்கள் தெரு நாய் கூட்டத்தை விரட்டி அடித்து புள்ளி மானை மீட்டனர்.
    • கொட்டகையில் கட்டி வைத்து அவற்றுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

     பாப்பிரெட்டிப்பட்டி,

    தருமபுரி மாவட்டத்தில் 37 சதவீத வனப்பகுதியில் அரிய வகை விலங்கினங்கள் வாழ்ந்து வருகின்றன. குறிப்பாக பாப்பிரெட்டிப்பட்டி பொம்மிடி பகுதியில் காப்புக்காடுகள் அதிக அளவில் உள்ளது. இந்தப் பகுதியில் வன விலங்குகளும், புள்ளிமான் இனமும் அதிகளவில் வாழ்ந்து வருகின்றன. கோடை காலம் தொடங்க உள்ளதால் தண்ணீர் தேடியும் , உணவு தேடி ஊருக்குள் வரும்போது தெரு நாய்கள், வேட்டை நாய்களிடம் சிக்கி அதிக அளவில் இறந்து வருகின்றன.

    இவற்றை தடுக்கும் பொருட்டு வனத்துறையினரும், வனபகுதிகளை ஒட்டி உள்ள விவசாயிகள் இடத்திலும் பொதுமக்களிடத்திலும் தப்பி வரும் மான்களை காப்பாற்றுவதற்கான வழிமுறைகளை கூறி வருகின்றனர்

    குறிப்பாக கிணறுகளுக்கு சுற்றியும் தடுப்புச் சுவர் அமைப்பது, கம்பிவேலி அமைப்பது, துணிகளை சுற்றி அடையாளப்படுத்துவது, விவசாயத் தோட்டங்களுக்கு வேலி அமைப்பது, வனவிலங்குகள் வந்தால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுப்பது போன்ற பணிகளை கிராமங்களில் தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பொம்மிடி தருமபுரி மெயின் ரோட்டில் மேம்பாலம் அருகில் கோவிந்தன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலப் பகுதியில் அருகில் உள்ள முருகர் மலையில் இருந்து 1 வயது மதிக்கத்தக்க புள்ளிமான் ஒன்று வேகமாக சென்றது. அதை கவனித்த தெரு நாய்கள் கூட்டமாக சேர்ந்து அந்த மானை வேட்டையாடத் தொடங்கியது. இதில் மான் தெருநாய்களிடம் சிக்கிக் கொண்டதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் தெரு நாய் கூட்டத்தை விரட்டி அடித்து புள்ளி மானை மீட்டனர். அவற்றை விவசாய தோட்டத்தில் உள்ள கொட்டகையில் கட்டி வைத்து அவற்றுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

    தகவலின் பேரில் மொரப்பூர் வனச்சரகர் ஆனந்தகுமார் சம்பந்தப்பட்ட பொம்மிடி வனவர் ரவிக்கு தகவல் தெரிவித்தார். அப்பகுதிக்கு விரைந்த வனக்காவலர் கபிலன் மானை மீட்டு அருகில் உள்ள கேத்து ரெட்டிப்பட்டி கால்நடை மருத்துவர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு அருகில் உள்ள காப்பு காட்டில் விட்டு விட்டனர்.

    ×