search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புள்ளிங்கோ கட்டிங்"

    • சில மாணவர்கள் ஓட்டம் பிடித்தனர்
    • கலெக்டர் கூட்டத்தில் ஒழுக்கம் தான் முக்கியம் என அறிவுரை

    வேலூர்:

    வேலூர் அண்ணாசாலையில் ஊரீசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களில் சிலர் புள்ளிங்கோ கட்டிங் ஒன் சைடு ஆப்சைட் லைன் கட்டிங், டாப் கட்டிங் போன்ற பல்வேறு முறைகளில் சரியான முறையில் தலைமுடியை வெட்டாமல் ஸ்டைலாக வந்துள்ளனர்.

    இதனால் பள்ளி நிர்வாகம் சார்பில் மாணவர்களை அழைத்து தலைமுடியை ஒழுக்கமாக வெட்டி வர வேண்டும் என்று பல நாட்களாக அறிவுறுத்தி வந்தனர். இதை மாணவர்கள் கண்டுகொள்ளவில்லை. இன்று பள்ளிக்கு வந்த மாணவர்களில் ஒழுங்கற்ற முறையில் முடி வைத்திருந்த மாணவர்களை கண்டறிந்த தலைமை ஆசிரியர் எபினேசர் பல்வேறு வகையில் கட்டிங் செய்திருந்த மாணவர்களை தனியாக பிரித்து பள்ளி வளாகத்தில் அமர செய்தார்.

    முடி திருத்தும் தொழிலாளர்கள் மூலம் பள்ளி வளாகத்திலேயே மாணவர்களுக்கு தலைமுடியை திருத்தம் செய்ய ஏற்பாடு செய்தார். முடி வெட்டும் போது சில மாணவர்கள் தப்பி ஓடினர். மாணவர்களை அழைத்து வந்து மீண்டும் முடியை வெட்டினார்கள்.

    பள்ளி வளாகத்திலேயே 75 மாணவர்களுக்கும் சீரான முறையில் முடித்திருத்தம் செய்யப்பட்டது. பின்னர்முடிவெட்டி கொண்ட மாணவர்களுக்கு பிஸ்கெட் வழங்கப்பட்டது.

    இதுகுறித்து தலைமை ஆசிரியர் எபினேசர் கூறுகையில்:-

    மாணவர்கள் பள்ளிக்கு ஒழுக்கமாக முடியை வெட்டி வரவேண்டும். சீருடை அணிந்து வரவேண்டும் மாணவர்களுக்கு ஒழுக்கம் தான் முக்கியம் கல்விதானாக வரும். எனவே நேற்று கலெக்டர் கூட்டத்தில் அறிவுறுத்திய படி இன்று இந்த பணியை சொந்த செலவில் முடியை வெட்டுகிறோம் என்றார்.

    • துணிச்சலான ஆசிரியர்கள் சிலர் மாணவர்களிடம் பணம் கொடுத்து மாணவர்களை முடித்திருக்கும் கடைக்கு அனுப்பி வைத்து சொந்த செலவில் முடி வெட்ட வைத்துள்ளனர்.
    • தனியார் மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் இதுபோன்ற ஒழுங்கீன செயல்களில் மாணவர்கள் ஈடுபடுவது குறைவாக உள்ளது.

    வேலூர்:

    அரசு பள்ளிகளில் சில மாணவர்கள் சமீபகாலமாக பஸ்களில் படிக்கட்டில் பயணம் செய்வது, வகுப்பறையில் நடனம் ஆடுவது, ஆசிரியர்களை மிரட்டுவது உள்ளிட்ட ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்டு வரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

    மாணவர்கள் முடிவெட்டும்போது, தலைமுடியில் கோடு போடுதல், பாக்ஸ் கட்டிங், ஒன் சைடு, வி கட், ஸ்பைக் என புள்ளிங்கோ மாதிரி வெட்டிக்கொண்டு பள்ளிக்கு வருகின்றனர்.

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் இதுபோன்ற அலங்காரங்களை தவிர்த்து, பள்ளி சூழலுக்கு ஏற்ப மாணவர்கள் சிகை அலங்காரம் செய்யுங்கள் என அறிவுறுத்தப்பட்டது. இது போன்ற மாணவர்களுக்கு முடி அலங்காரம் செய்யக்கூடாது என வேலூர் கலெக்டர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

    அரையாண்டு விடுமுறைக்கு பின் பள்ளி திரும்பிய மாணவர்கள் பலர் புள்ளிங்கோ கட்டிங் உடன் பள்ளிக்கு வந்துள்ளனர். அரசு பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களின் சிகை அலங்காரம் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சுற்றியுள்ள அரசு பள்ளிகளில் வரும் மாணவர்கள் தலைமுடியை வித்தியாசமான கோணத்தில் வெட்டியும் கலர் அடித்தும் வருகின்றனர்.

    அவர்களை பார்த்த அரசு பள்ளி ஆசிரியர்கள் எப்படி அவர்களை கண்டிப்பது அறிவுரை வழங்குவது என திகைத்துப்போய் நிற்கின்றனர்.

    துணிச்சலான ஆசிரியர்கள் சிலர் மாணவர்களிடம் பணம் கொடுத்து மாணவர்களை முடித்திருக்கும் கடைக்கு அனுப்பி வைத்து சொந்த செலவில் முடி வெட்ட வைத்துள்ளனர்.

    தனியார் மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் இதுபோன்ற ஒழுங்கீன செயல்களில் மாணவர்கள் ஈடுபடுவது குறைவாக உள்ளது.

    ஆனால் அரசு பள்ளிகளில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் முதல் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர் வரை இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளனர். தட்டிகேட்கும் ஆசிரியர்களையும் முறைக்கும் அவல நிலையும் உள்ளது.

    மாணவர்களை கண்டிக்க பயந்துபல ஆசிரியர்கள் தங்களுக்கு ஏன் வம்பு என்று இருக்கின்றனர். மேலும் இதுபோல சில மாணவர்களின் செயல்பாட்டால் பல ஆசிரியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

    ஆசிரியர்கள் கண்டிக்க கூடாது, அடிக்க கூடாது என்று கட்டுப்பாடு விதித்துள்ள கல்வித்துறை இப்பேற்பட்ட மாணவர்களை எப்படி கையாள்வது அவர்களை எப்படி திருத்துவது என்பதை ஆசிரியர்களுக்கு போதிக்க வேண்டும்.

    அல்லது சரியான கட்டுப்பாட்டு வழிமுறைகளை கல்வித்துறை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    ×