search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புள்ளிங்கோ கட்டிங் மாணவர்களுக்கு பள்ளியில் முடி திருத்தம்
    X

    வேலூர் ஊரீசு பள்ளியில் மாணவர்களுக்கு முடி திருத்தம் செய்த காட்சி.

    புள்ளிங்கோ கட்டிங் மாணவர்களுக்கு பள்ளியில் முடி திருத்தம்

    • சில மாணவர்கள் ஓட்டம் பிடித்தனர்
    • கலெக்டர் கூட்டத்தில் ஒழுக்கம் தான் முக்கியம் என அறிவுரை

    வேலூர்:

    வேலூர் அண்ணாசாலையில் ஊரீசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களில் சிலர் புள்ளிங்கோ கட்டிங் ஒன் சைடு ஆப்சைட் லைன் கட்டிங், டாப் கட்டிங் போன்ற பல்வேறு முறைகளில் சரியான முறையில் தலைமுடியை வெட்டாமல் ஸ்டைலாக வந்துள்ளனர்.

    இதனால் பள்ளி நிர்வாகம் சார்பில் மாணவர்களை அழைத்து தலைமுடியை ஒழுக்கமாக வெட்டி வர வேண்டும் என்று பல நாட்களாக அறிவுறுத்தி வந்தனர். இதை மாணவர்கள் கண்டுகொள்ளவில்லை. இன்று பள்ளிக்கு வந்த மாணவர்களில் ஒழுங்கற்ற முறையில் முடி வைத்திருந்த மாணவர்களை கண்டறிந்த தலைமை ஆசிரியர் எபினேசர் பல்வேறு வகையில் கட்டிங் செய்திருந்த மாணவர்களை தனியாக பிரித்து பள்ளி வளாகத்தில் அமர செய்தார்.

    முடி திருத்தும் தொழிலாளர்கள் மூலம் பள்ளி வளாகத்திலேயே மாணவர்களுக்கு தலைமுடியை திருத்தம் செய்ய ஏற்பாடு செய்தார். முடி வெட்டும் போது சில மாணவர்கள் தப்பி ஓடினர். மாணவர்களை அழைத்து வந்து மீண்டும் முடியை வெட்டினார்கள்.

    பள்ளி வளாகத்திலேயே 75 மாணவர்களுக்கும் சீரான முறையில் முடித்திருத்தம் செய்யப்பட்டது. பின்னர்முடிவெட்டி கொண்ட மாணவர்களுக்கு பிஸ்கெட் வழங்கப்பட்டது.

    இதுகுறித்து தலைமை ஆசிரியர் எபினேசர் கூறுகையில்:-

    மாணவர்கள் பள்ளிக்கு ஒழுக்கமாக முடியை வெட்டி வரவேண்டும். சீருடை அணிந்து வரவேண்டும் மாணவர்களுக்கு ஒழுக்கம் தான் முக்கியம் கல்விதானாக வரும். எனவே நேற்று கலெக்டர் கூட்டத்தில் அறிவுறுத்திய படி இன்று இந்த பணியை சொந்த செலவில் முடியை வெட்டுகிறோம் என்றார்.

    Next Story
    ×