search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புகைப்பட"

    • ராசிபுரம் அருகே உள்ள மூலக்குறிச்சி ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டது.
    • நாமக்கல் மாவட்டத்தில் நடந்த வருமுன் காப்போம் திட்ட நிகழ்ச்சி, ஏழைப் பெண்களுக்கு திருமண நிதி உதவியுடன் திருமாங்கல்யத்திற்கு தங்கம் வழங்கிய நிகழ்ச்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப் பட்டிருந்தன.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள மூலக்குறிச்சி ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டது.

    இந்த புகைப்பட கண்காட்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா பெருந்தொற்று காலத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண உதவித்தொகை வழங்கிய நிகழ்ச்சி, மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டங்கள் உதவிகளை வழங்கிய நிகழ்ச்சி, ஒரு லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு ஆணை வழங்குவதன் தொடக்க விழா நிகழ்ச்சி, நாமக்கல் மாவட்டத்தில் நடந்த வருமுன் காப்போம் திட்ட நிகழ்ச்சி, ஏழைப் பெண்களுக்கு திருமண நிதி உதவியுடன் திருமாங்கல்யத்திற்கு தங்கம் வழங்கிய நிகழ்ச்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப் பட்டிருந்தன.

    இந்த புகைப்படக் கண்காட்சியை அந்தப் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் நேரில் பார்த்து அரசின் திட்டங்களை தெரிந்து கொண்டனர்.

    ×