என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பிணை
நீங்கள் தேடியது "பிணை"
மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு தற்போது மகன் திருமணத்துக்கான பரோலில் வந்துள்ள லாலு பிரசாத் யாதவுக்கு 6 வாரம் ஜாமின் வழங்கி ராஞ்சி ஐகோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. #LaluPrasadYadav
ராஞ்சி:
பீகார் மாநில முன்னாள் முதல்வராக இருந்த ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் கால்நடை தீவன முறைகேட்டில் சிக்கினார். இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் லாலு பிரசாத் யாதவ் மீது தொடரப்பட்டது. இதில் 3 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது.
முதல் வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனையும், 2-வது வழக்கில் 3½ ஆண்டுகளும், 3-வது வழக்கில் 5 ஆண்டும் லாலுவுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது.
ராஞ்சி பிர்சா முன்டா சிறையில் அடைக்கப்பட்ட அவர் உடல் நலக்குறைவால் ராஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கால்நடை தீவன முறைகேடு தொடர்பான நான்காவது வழக்கில் அவருக்கு சமீபத்தில் 14 ஆண்டுகள் சிறை தண்டனையும் 60 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
அவரது உடல்நிலை மோசமானதை அடுத்து அடுத்து, டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் லாலு அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின்னர், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து மீண்டும் பாட்னா ரிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது மருத்துவர்களின் கண்கானிப்பில் உள்ளார்.
இதனை அடுத்து, உடல்நிலையை காரணம் காட்டி ஜாமின் கோரி அவர் ராஞ்சி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவை இன்று பரிசீலித்த நீதிபதிகள் 6 வார காலம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டனர்.
ஏற்கனவே, அவரது மகன் திருமணத்தை ஒட்டி அவருக்கு சிறைத்துறை 3 நாட்கள் பரோல் வழங்கியதை அடுத்து நேற்று சிறையில் இருந்து வீட்டுக்கு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. #LaluPrasadYadav
பீகார் மாநில முன்னாள் முதல்வராக இருந்த ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் கால்நடை தீவன முறைகேட்டில் சிக்கினார். இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் லாலு பிரசாத் யாதவ் மீது தொடரப்பட்டது. இதில் 3 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது.
முதல் வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனையும், 2-வது வழக்கில் 3½ ஆண்டுகளும், 3-வது வழக்கில் 5 ஆண்டும் லாலுவுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது.
ராஞ்சி பிர்சா முன்டா சிறையில் அடைக்கப்பட்ட அவர் உடல் நலக்குறைவால் ராஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கால்நடை தீவன முறைகேடு தொடர்பான நான்காவது வழக்கில் அவருக்கு சமீபத்தில் 14 ஆண்டுகள் சிறை தண்டனையும் 60 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
ஏய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து பாட்னா திரும்பிய போது
அவரது உடல்நிலை மோசமானதை அடுத்து அடுத்து, டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் லாலு அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின்னர், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து மீண்டும் பாட்னா ரிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது மருத்துவர்களின் கண்கானிப்பில் உள்ளார்.
இதனை அடுத்து, உடல்நிலையை காரணம் காட்டி ஜாமின் கோரி அவர் ராஞ்சி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவை இன்று பரிசீலித்த நீதிபதிகள் 6 வார காலம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டனர்.
ஏற்கனவே, அவரது மகன் திருமணத்தை ஒட்டி அவருக்கு சிறைத்துறை 3 நாட்கள் பரோல் வழங்கியதை அடுத்து நேற்று சிறையில் இருந்து வீட்டுக்கு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. #LaluPrasadYadav
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X