search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாம்பாட்டி சித்தர்"

    • முருகன் அருள் பெற்று பிணி நீங்கி சித்தர் மருதமலையில் வாழ்ந்துள்ளார்.
    • அங்குள்ள பாறையானது பாம்பு போன்ற அமைப்பில் இயற்கையாகவே அமைந்துள்ளது.

    மருதமலை முருகன் கோவிலில் பாம்பாட்டி சித்தர் குகை உள்ளது.

    இங்கு ஏராளமான பக்தர்கள் வந்து பாம்பாட்டி சித்தரை வணங்கி தியானம் செய்து வழிபட்டு செல்கிறார்கள்.

    கோவில் தென்புறத்தில் படிக்கட்டுகள் வழியாக கீழ் இறங்கி கிழக்கு திசை நோக்கி சென்றால் அங்கு பாம்பாட்டி சித்தர் சன்னதி உள்ளது.

    அங்குள்ள பாறையானது பாம்பு போன்ற அமைப்பில் இயற்கையாகவே அமைந்துள்ளது.

    பாம்பாட்டி சித்தருக்கும் கோவிலுக்கும் ஆதி மூலஸ்தானத்துக்கும் இடையே சுரங்க வழி உள்ளது.

    அதன் வழியாக தான் சித்தர் ஆதி மூலஸ்தானத்தில் உள்ள வள்ளி தெய்வானையுடன் அமர்ந்திருக்கும் முருகப்பெருமானை தினமும், காலை , மாலை நேரத்தில் தரிசித்து வருவதாக நம்பப்படுகிறது.

    முருகன் அருள் பெற்று பிணி நீங்கி சித்தர் மருதமலையில் வாழ்ந்துள்ளார்.

    இவர் வாழ்ந்த குகையில் ஒரு பாம்பு, பாலும் பழமும் உண்டு செல்வதாக சொல்லப்படுகிறது.

    தற்போது பக்தர்கள் பாம்புக்கு பாலும் பழமும் அளித்து வருகிறார்கள்.

    பாம்பாட்டி சித்தரை வழிபடும் பக்தர்களுக்கு நஞ்சினால் ஏற்படும் நோய்கள் நீங்கும்.

    இந்த சித்தரை வழி பட்டால் அமைதியின்றி வாழ்வோர் அமைதியான வாழ்க்கையான பெறுவர்.

    இங்கு தியானம் செய்வது மன அமைதியை தரும்.

    • முருகப்பெருமான் பாம்பாட்டி சித்தரிடம் மருத மலையில் அருள் விளையாட்டுகள் செய்தார்.
    • பதினெட்டு சித்தர்களுள் பாம்பாட்டி சித்தரும் ஒருவர்.

    பதினெட்டு சித்தர்களுள் பாம்பாட்டி சித்தரும் ஒருவர்.

    இறைவனை இடைவிடாது நினைத்து நினைத்து அகக்கண்ணால் கண்டு ஆத்ம சக்தியால் செயற்கரிய செயல்களை செய்து மருத்துவம், ஜோதிடம், இரச வாதம் ஆகியவற்றில் கை தேர்ந்தவர்களை சித்தர்கள் என்பார்கள்.

    பாம்பாட்டி சித்தர் பாண்டிய நாட்டில் காடுகளில் காணப்பட்ட பாம்புகளை பிடித்து ஆட்டியும், தன் சொல்படி நடக்க செய்தும் வந்தார்.

    ஒருமுறை "நவரத்னம்" என்னும் பாம்பை ஆட்ட முயற்சித்த போது சட்டை முனிவரை சந்தித்து யோக நெறியில் சமாதி கூடும் நிலை பெற்றாராம்.

    பாம்பாட்டி சித்தர் ஒரு முறை இறந்து போன மன்னன் உடலில் கூடு விட்டு கூடு பாயும் வித்தை மூலம் புகுந்தாராம்.

    இவ்வாறு பல சித்துகளை செய்த இவர் இந்த பாம்பை ஆட்டுவித்ததால் பாம்பாட்டி சித்தர் என்று அழைக்கப்பட்டார்.

    முருகப்பெருமான் பாம்பாட்டி சித்தரிடம் மருத மலையில் அருள் விளையாட்டுகள் செய்தார்.

    ஒரு காலத்தில் உயரமான குன்று உருண்டோடி வர சித்தர் தம் அருட் சக்தியால் பாறையின் முகட்டிலேயே நிற்கும்படி செய்தார் என்பர்.

    ×