search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாதிப்பு இல்லை"

    • 19 மீனவ கிராமங்களில் பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
    • கோட்டகுப்பத்தில் செய்தி யாளர்களிடம் பேட்டி அளித்தார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் தலை மையில் கூடுதல் கலெக்டர் சித்ரா, விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. பாண்டியன், மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஸ்ரீ நாதா உள்ளிட்ட அதிகாரிகள் மாண்டஸ் புயல் பாதிக்கப்பட்ட அனு மந்தை, அழகன் குப்பம், பெரிய முதலியார்சாவடி, சின்ன முதலியார் சாவடி, கோட்ட குப்பம் உள்ளிட்ட 19 மீனவ கிராமங்களில் பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்ற னர். அதனைத் தொடர்ந்து கோட்டகுப்பத்தில் செய்தி யாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்பொழுது கலெக்டர் மோகன் கூறியதாவது:-

    மாண்டஸ் புயல் காரண மாக விழுப்புரம் மாவட்ட த்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. 5 இடங்களில் 13 மரங்கள் விழுந்தன, அதனையும் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டு, போக்குவரத்துக்கு தடை இல்லாமல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன. மேலும் மாவட்டம் முழு வதும் வேறு ஏதாவது பாதிப்பு உள்ளதா என்பது குறித்து கணக்கெடுப்பு செய்வதற்கு அறிவுறுத்தப் பட்டுள்ளதாக மாவட்ட, கலெக்டர் மோகன் தெரிவித்தார். மேலும் பிள்ளை சாவடி பகுதிகளில் ரூ. 14 கோடி மதிப்பில் தூண்டில் வளைவு அமைப்பதற்கான பணி மழை காரணமாக தாமதம் ஆனது நாளை முதல் அந்த பணி தொடங்கும் எனவும் கலெக்டர் மோகன் தெரிவித்தார்.

    ×