என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பாட்டி கொலை"
- நலம் விசாரிக்க வந்த பாட்டியை, பேரன் பாட்டிலால் அடித்துக்கொன்றார்.
- ஜெய்ஹிந்துபுரம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை ஜெய்ஹிந்துபுரம் பாரதியார் ரோடு ஏ.ஜி.–சுப்புராமன் முதல் தெருவை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 70). ஜீவா நகர் 2-வது தெரு அங்கையர்கன்னி இரண்டாவது தெருவை சேர்ந்தவர் ராமதாஸ் மகன் பீட்டர் டேனியல் (26). இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட் டவர் ஆவார். அதற்காக உரிய மருத்துவமும் பெற்று வந்தார்.
இந்த நிலையில் பேரனை பார்த்து நலம் விசாரிப்ப–தற்காக பாட்டி ராஜேஸ்வரி சென்றிருந்தார். அப்போது பாட்டிக்கும், பேரனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதால் பேரனை கோபித்துக்கொள்ளாமல் சாந்தமாக பேசினார்.
ஆனால் ஆத்திரம் தீராத பீட்டர் டேனியல் பாட்டிலை எடுத்து பாட்டியை சரமாரி–யாக தாக்கினார். இதில் ரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்த ராஜேஸ்வரியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பல–னின்றி ராஜேஸ்வரி பரிதாப–மாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பேரன் பீட்டர் டேனியல் மீது ஜெய்ஹிந்துபுரம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்