search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நலம் விசாரிக்க வந்த பாட்டியை பாட்டிலால் அடித்துக்கொன்ற பேரன்
    X

    நலம் விசாரிக்க வந்த பாட்டியை பாட்டிலால் அடித்துக்கொன்ற பேரன்

    • நலம் விசாரிக்க வந்த பாட்டியை, பேரன் பாட்டிலால் அடித்துக்கொன்றார்.
    • ஜெய்ஹிந்துபுரம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை ஜெய்ஹிந்துபுரம் பாரதியார் ரோடு ஏ.ஜி.–சுப்புராமன் முதல் தெருவை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 70). ஜீவா நகர் 2-வது தெரு அங்கையர்கன்னி இரண்டாவது தெருவை சேர்ந்தவர் ராமதாஸ் மகன் பீட்டர் டேனியல் (26). இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட் டவர் ஆவார். அதற்காக உரிய மருத்துவமும் பெற்று வந்தார்.

    இந்த நிலையில் பேரனை பார்த்து நலம் விசாரிப்ப–தற்காக பாட்டி ராஜேஸ்வரி சென்றிருந்தார். அப்போது பாட்டிக்கும், பேரனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதால் பேரனை கோபித்துக்கொள்ளாமல் சாந்தமாக பேசினார்.

    ஆனால் ஆத்திரம் தீராத பீட்டர் டேனியல் பாட்டிலை எடுத்து பாட்டியை சரமாரி–யாக தாக்கினார். இதில் ரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்த ராஜேஸ்வரியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பல–னின்றி ராஜேஸ்வரி பரிதாப–மாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பேரன் பீட்டர் டேனியல் மீது ஜெய்ஹிந்துபுரம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×