search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாடப்பிரிவு"

    • மாணவர்களின் கல்வியும், எதிர்காலமும், ஆசிரியர்களின் வேலை வாய்ப்பும் பாதிக்கப்படும்
    • பலர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றனர்.

    நாகர்கோவில் :

    முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான தளவாய்சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர், பணி மாற்றம் தொடர்பான கூகுள் மீட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்ததாக காரணம் காட்டி கட்டிடவியல் மற்றும் எந்திரவியல் ஆகிய தமிழ் வழி பொறியியல் பாடப்பிரி வுகளை ரத்து செய்ய அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. இந்த முடிவை கைவிட வேண்டும். மேலும் துணை வேந்தர் கூறியதாக கூறப்படும் இத்தகவலால் மாணவர்களின் கல்வியும், எதிர்காலமும், ஆசிரியர்களின் வேலை வாய்ப்பும் பாதிக்கப்படும். அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த முடிவு கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாட்டில் கிராமப்புற மாணவர்களின் கல்வி வளர்ச்சி அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் பொறியியல் கல்வியின் தேவையை கருத்தில் கொண்டு அண்ணா பல்கலைக்கழ கத்தின் வாயிலாக தமிழகம் எங்கும் 14 உறுப்பு கல்லூரிகள் பல்வேறு காலக்கட்டங்களில் தொடங்கப்பட்டன.

    இந்த கல்லூரிகளின் முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்களுடன் அண்ணா பல்கலைக்கழ கத்தின் துணை வேந்தர் கூகுள் மீட்டின் வழியாக கலந்தாய்வு நடத்தியதாக வரப்பெற்ற தகவலின் அடிப்படையில், இக்கலந்தாய்வில் உறுப்பு கல்லூரிகளில் உள்ள தமிழ் வழி பொறியியல் பாடப்பிரிவுகளையும், ஆங்கில வழியில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள பாடப்பரிவுகளையும் ரத்து செய்வதற்கு அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

    ரத்து செய்யப்படும் பாடப்பிரிவுகளில் பணியாற்றி வரும் இடைக்கால பேராசிரி யர்கள் அனைவரும் பணி நீக்கம் செய்யப்படும் நிலை ஏற்படும். மேலும் கிராமப்புற மாணவர்களின் பொறியியல் கனவை நனவாக்க அவர்கள் வெகுதூரம் சென்று பொறியியல் படிக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படும் நிலையும் ஏற்படும்.கட்டிடவியல் மற்றும் எந்திரவியல் பாடப்பரி வுகள் நீக்கப்படுவதற்காக பல்கலைக் கழக நிர்வாகத்தின் சார்பில் கூறப்படும் காரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.

    உறுப்பு கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களில் பெரும்பான்மையினர் இடைக்கால பணியாளர்கள் தான். அவர்களில் பலர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றனர். அவர்களை ஒரே ஆணையில் பணி நீக்குவது நியாயமற்றது. அவர்கள் மட்டுமன்றி உறுப்பு கல்லூரிகளில் சேர்ந்து கட்டிடவியல் அல்லது எந்திரவியல் படிக்கும் வாய்ப்பை கல்லூரிகள் உள்ள பகுதியை சார்ந்த மாண வர்கள் இழப்பார்கள்.

    தமிழ்நாட்டில் தமிழ் வழி கல்வியில் அனைத்து அரசு வேலை வாய்ப்புகளிலும் 20 சதவீத இட ஒதுக்கீடு உள்ளது. தமிழ் வழிப் படிப்புகள் அனைத்தும் மூடப்பட்டால், தமிழ்நாடு அரசு பணிகளில் இந்த இட ஒதுக்கீட்டிற்கு எந்த அர்த்தமும் இல்லை. ஏனெனில் இந்த கல்லூரிகள் மட்டுமே தமிழ் வழி பொறியியல் படிப்புகளை வழங்குகின்றன. மேலும் இவ்வாறு தமிழ் வழி கல்வியை நிரந்தரமாக மூடுவதன் மூலம் பள்ளிகளிலும், மாணவர்கள் தமிழ் வழியில் சேர்ந்து பயில்வது கணிசமாக குறையும்.

    அண்ணா பல்கலைக்கழகத்தில் இதே பாடப்பிரிவில் சேர்வதற்கு கடும் போட்டி நிலவும் நிலையில் உறுப்பு கல்லூரிகளில் சேர மாணவர்கள் முன்வராததற்கு காரணம் இரண்டிற்கு இடையிலான கட்டமைப்பு வசதிகள் வேறுபாடுகள் தான். உறுப்பு கல்லூரிகளின் கட்டமைப்பு வசதிகளை அண்ணா பல்கலைக்கழ கத்திற்கு இணையாக மேம்படுத்தும் சவாலை தான் பல்கலைக்கழக நிர்வாகம் ஏற்றுக் கொண்டிருக்க வேண்டுமே தவிர பாடப்பரிவுகளை ரத்து செய்யும் முடிவை அல்ல. தமிழுக்கு ஆற்றிய பணிகள் குறித்த விவாதம் எழும்போதெல்லாம் 10 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் வழியில் பொறியியல் படிப்பை அறிமுகப்படுத்தியதை தமிழ்நாடு அரசு பெருமையுடன் நினைவு கூறுகிறது. ஆனால் அதற்கு முற்றிலும் மாறாக ஒரே நேரத்தில் 11 உறுப்பு கல்லூரிகளின் தமிழ் பாடப்பிரிவை ரத்து செய்வது அரசுக்கும், அண்ணா பல்கலைக்கழ கத்திற்கும் கண்டிப்பாக பெருமை சேர்க்காது. இதன் அடிப்படையில் உறுப்பு கல்லூரிகளின் கட்டிட வியல் மற்றும் எந்திரவியல் பாடப்பரிவு களை ரத்து செய்யும் திட் டத்தை கைவிட வேண் டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பி.ஏ தமிழ் மற்றும் ஆங்கிலம், பிபிஏ, பி.காம்., பி.எஸ்சி, கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றிருந்தது.
    • வகுப்புகள் தொடங்கிய நிலையில் மாணவ- மாணவிகள் ஆர்வத்துடன் கல்லூரிக்கு வந்தனர்.

    பூதலூர்:

    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் புதிதாக கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என்று தமிழக சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி திருக்காட்டுப்பள்ளி கலை அறிவியல் கல்லூரி தற்காலிகமாக பூதலூரில் உள்ள பழைய ஊராட்சி ஒன்றிய கட்டிடவளாகத்தில் செயல்பட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது.

    இந்த கல்லூரியில் சேர்வதற்கான மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற்று முடிந்தது. தமிழக உயர்கல்வித்துறை அறிவிப்பின் பேரில் திருக்காட்டுப்பள்ளி அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் நேற்று தொடங்கப்பட்டன. கல்லூரியில் பி.ஏ தமிழ் மற்றும் ஆங்கிலம், பிபிஏ, பி.காம்., பிஎஸ்சி, கம்ப்யூட்டர் சயின்ஸ், ஆகிய பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று இருந்தது.

    நேற்று வகுப்புகள் தொடங்கிய நிலையில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கல்லூரிக்கு வந்தனர்.கல்லூரிக்கு வந்த மாணவ மாணவிகளை கல்லூரி முதல்வர் ராஜா வரதராஜா இனிப்பு கொடுத்து வரவேற்றார்.

    பேராசிரியர்கள் ஆகாஷ், பாலு, முருகானந்தம், பாலாஜி, கல்லூரி அலுவலக கண்காணிப்பாளர் தேவிகலா ஆகியோரும் மாணவர்களை வரவேற்றனர். இதனை தொடர்ந்து அனைத்து மாணவ மாணவிகளையும் ஒருங்கே அமர வைத்து கல்லூரி நடைமுறை மற்றும் நல்லொழுக்க அறிவுரைகள் கூறப்பட்டன.

    மாணவ-மாணவிகள் தங்கள் பகுதியிலேயே கல்லூரி அமைவது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தனர்.

    • இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், கல்லூரியின் சேவை மையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
    • தமிழ் வழி கல்வி பயில ஆர்வம் உள்ள மாணவர்கள் இந்த படிப்புகளை தேர்வு செய்யலாம்.

    கோவை:

    கோவை பீளமேடு அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் நடப்பாண்டி ற்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு, தமிழ்நாடு அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரியின் www.tnpoly. in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

    இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், கல்லூரியின் சேவை மையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இக்கல்லூரியில் பட்டய பாடப் பிரிவில், ஆங்கில வழியில் சிவில் என்ஜினீயரிங், மெக்கானி க்கல் என்ஜினீயரிங், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் என்ஜினீயரிங், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூ னிகேஷன் என்ஜினீயரிங், கம்ப்யூட்டர் என்ஜினீயரிங், புரோடக்ஷன் என்ஜினீயரிங், இ.சி.ஜி டெக்னாலஜி ஆகிய 7 படிப்புகள் வழங்கப்படுகிறது.

    இதற்கு 10-ம் வகுப்பு படித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் நேரடி 2-ம் ஆண்டு பட்டய படிப்பில் சேர பிளஸ்-2 தேர்ச்சி அல்லது 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் 2 ஆண்டுகள் ஐ.டி.ஐ.யில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பகுதி நேர பட்டய சேர்க்கைக்கு 10-ம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ 2 வருடம் இருக்க வேண்டும். இது 4 ஆண்டு படிப்பாகும்.

    இந்த படிப்புகளுக்கு இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க முடியும். விண்ணப்ப கட்டணம் பொதுப்பிரிவினருக்கு ரூ.150, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை. டெபிட் கார்டு, நெட் பேங்கிங் மூலம் விண்ணப் பணத்தை செலுத்தலாம். விண்ணப்பிக்க வரும் ஜூலை 8-ந் தேதி கடை நாளாகும்.

    மேலும், கோவை பீளமேடு அரசினர் பாலி டெக்னிக் கல்லூரியில் இந்த ஆண்டில் சிவில் என்ஜினீயரிங், மெக்கானிக்கல் பிரிவு தமிழ் வழியில் பாடப்பிரிவு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது தவிர இ.சி. ஜி டெக்னாலஜி என்ற புதிய பாடப்பிரிவும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பாடப்பிரிவுகளில் தலா 60 இடங்கள் உள்ளன.

    இவர்களுக்கு இலவச பாடப்புத்தகம் வழங்கப்படும். தமிழ் வழி கல்வி பயில ஆர்வம் உள்ள மாணவர்கள் இந்த படிப்புகளை தேர்வு செய்யலாம். அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் படித்த மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவி தொகை வழங்கப்படும். ஆண்டு கட்டணம் ரூ.2,500க்கு கீழ் இருக்கும் என கல்லூரியின் முதல்வர் தேன்மொழி தெரிவித்தார்.

    ×