search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாஜனதா வேட்பாளர்"

    இட்டாவா தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளரான ராம்சங்கர் கதேரியாவை எதிர்த்து அவருடைய மனைவி மிருதுளா கட்டாரியா சுயேச்சையாக அதே தொகுதியில் போட்டியிடுகிறார். #LokSabhaElections2019 #EtawahConstituency
    இட்டாவா:

    உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜனதா சார்பில் ராம்சங்கர் கதேரியா கடந்த முறை ஆக்ரா பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆனார். வரும் தேர்தலில் அவர் இட்டாவா தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் தாழ்த்தப்பட்டோர் தேசிய கமி‌‌ஷன் தலைவராகவும் உள்ளார்.



    இந்நிலையில் அவருடைய மனைவி மிருதுளா கட்டாரியா சுயேச்சையாக கணவரை எதிர்த்து அதே தொகுதியில் போட்டியிடுகிறார். இது குறித்து அவர் கூறுகையில், கடந்த பல ஆண்டுகளாக இட்டாவா தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால் இந்த முறையும் எனக்கு ‘சீட்’ வழங்கப்படவில்லை. என் கணவர் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை. பா.ஜனதா கட்சிக்கு பாடம் புகட்ட சுயேச்சையாக களம் இறங்கி உள்ளேன் என்றார்.

    இட்டாவா தொகுதியின் தற்போதைய எம்.பி. அசோக் டேக்ரே, தனக்கு மீண்டும் அதே தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் காங்கிரஸ் கட்சிக்கு தாவினார் என்பது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #EtawahConstituency

    தேர்தல் பிரசாரத்தில் ஐயப்ப சாமி பெயரை பயன்படுத்தி வாக்கு சேகரித்த நடிகர் சுரேஷ்கோபிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. #LokSabhaElections2019 #ThrissurConstituency #SureshGopi
    திருச்சூர்:

    மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சுரேஷ்கோபி. இவர் பா.ஜ.க. சார்பில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார். அந்த கட்சியின் சார்பில் தற்போது திருச்சூர் பாராளுமன்ற தொகுதியில் வேட்பாளராக அவர் களம் இறங்கி உள்ளார்.



    இந்த நிலையில் தேர்தல் பிரசாரத்தின் போது ஐயப்ப சாமியின் பெயரை பயன்படுத்தி வாக்கு சேகரித்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

    இதுதொடர்பாக திருச்சூர் மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான, அனுபமாவிடம் புகார் செய்யப்பட்டது. இதுகுறித்து 48 மணி நேரத்தில் பதில் அளிக்குமாறு சுரேஷ்கோபிக்கு மாவட்ட தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பினார்.

    இந்த நடவடிக்கை குறித்து மாநில தேர்தல் அதிகாரி தீகா ராம் மீனா கூறும்போது, “தேர்தல் பிரசாரத்தின் போது ஐயப்ப சாமியின் பெயரையோ அல்லது வேறு எந்த கடவுளின் பெயரையோ பயன்படுத்தக் கூடாது என்று தேர்தல் ஆணையம் கூறி உள்ளது. ஆனால் நடிகர் சுரேஷ்கோபி ஐயப்ப சாமி குறித்து பேசியதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இதனால் அவருக்கு மாவட்ட தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பியது சரியான நடவடிக்கைதான்” என்றார். #LokSabhaElections2019 #ThrissurConstituency #SureshGopi

    ×