என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பஸ் சேவை"
- கன்னியாகுமரி யாத்திரை என பெயரிடப்பட்டுள்ளது.
- இதற்காக ரூ.600 கட்டணமாக வசூலிக்கிறார்கள்.
கன்னியாகுமரி:
நெய்யாற்றின்கரை பணிமனையில் இருந்து கேரள அரசு போக்குவரத்து கழக பட்ஜெட் டூரிசம் செல் மூலமாக கன்னியாகுமரி யாத்திரை என பெயரிடப்பட்டுள்ள இந்த யாத்திரை திருவனந்தபுரம் பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கியது. தினமும் காலையில் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும் பஸ் திற்பரப்பு வருகிறது.
அங்கு திற்பரப்பு மகாதேவர் ஆலய தரிசனம் முடித்து விட்டு குமார கோவில் தரிசனத்துக்காக செல்கிறது. அங்கிருந்து நேராக வட்டக்கோட்டைக்கு செல்லும் பஸ் மாலையில் கன்னியாகுமரி திருப்பதி கோவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் தரிசனம் முடிந்த பின்னர் திருவனந்தபுரத்துக்கு செல்கிறது.
இதற்காக ரூ.600 கட்டண மாக வசூலிக்கிறார்கள். குழுக்களாக சேர்ந்து முன் பதிவு செய்து ஒரு முறை 50 பேர் வரை அழைத்துச்செல்கிறார்கள். திருவனந்தபுரம் பகுதியில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கோவில்களுக்கு வர விரும்புபவர்களுக்கு இந்த பயண திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
நேற்று முதல் பஸ் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு திற்பரப்புக்கு வந்தது. அங்குள்ள மகாதேவர் ஆலயத்தில் தரிசனம் செய்த பின்னர் பஸ்சில் வந்தவர்கள் கோவிலை சுற்றி பார்த்துவிட்டு நேராக குமாரகோவில் சென்றார்கள். அதன் பிறகு மற்ற ஆன்மீக சுற்றுலா தலங்களுக்கும் சென்று மாலையில் திருவனந்தபுரம் புறப்பட்டு சென்றது.
- விழாவுக்கு ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார்.
- ஒட்டநத்தம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சண்முகையா எம்.எல்.ஏ., திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஓட்டப்பிடாரம்:
கோவில்பட்டியில் இருந்து சங்கம்பட்டி வரை அரசு பஸ் வந்து சென்று கொண்டு இருந்தது. இந்த பஸ் வாஞ்சிமணியாச்சி ரெயில் நிலையம் வரை இயக்க வேண்டும் என மணியாச்சி கிராம சுற்றுவட்டார பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
பொதுமக்களி்ன் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று புதிய வழித்தடத்தில் பஸ் சேவை தொடக்க விழா நடந்தது. விழாவுக்கு ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார்.
தூத்துக்குடி கோட்ட மேலாளர் அழகிரிசாமி, கோவில்பட்டி பணிமனை கிளை மேலாளர் ஜெகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சண்முகையா எம்.எல்.ஏ புதிய வழித்தடத்தில் பஸ்சை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து ஒட்டநத்தம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும், மருத்துவ உபகரணங்கள் பற்றியும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மருத்துவ மனைக்கு வரும் பொதுமக்க ளிடம் கனிவான முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்றும், மருத்துவமனை நிர்வாகம் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்காதவாறு அனைவரும் நடந்து கொள்ளும்படி மருத்துவமனை அதிகாரிகளிடம் எம்.எல்.ஏ கேட்டுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் கோவில்பட்டி தொ.மு.ச செயலாளர் மாரிமுத்து, மாவட்ட பிரதிநிதி ஜோசப் மோகன், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் மாடசாமி, பஞ்சாயத்து தலைவர்கள் பிரேமா, அய்யாத்துரை மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்