search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஸ் உடைப்பு"

    • பஸ்சை , டிரைவர் ஆட்சியப்பன் என்பவர் ஓட்டிச்சென்றார்.
    • தாக்குதல் நடத்திய 2 மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அரசு பஸ்சான பி.ஆர்.டி.சி, நேற்று பகல், காரைக்கால் எல்லையான அம்பகரத்தூரில் இருந்து காரைக்கால் நோக்கி 20-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை , டிரைவர் ஆட்சியப்பன் என்பவர் ஓட்டிச்சென்றார். காரை க்கால் திருநள்ளாறு சாலை யான பச்சூர் அருகே வந்த போது, எதிர் திசையில் மோட்டார் சைக்களில் ஹெல்மெட்டுனுடன் வந்த 2 மர்ம நபர்கள், திடீரென பஸ் மீது கல்லை வீசி தாக்குதல் நடத்திவிட்டு மின்னல் வேகத்தில் மாயமாகினர். இதில் பஸ்ஸின் முன்புற கண்ணாடி உடைந்து சிதறியது.

    சிதறிய கண்ணாடி துண்டுகள், பஸ்சின் முன் வரிசையில் அமர்ந்து இருந்த ஒரு பெண் பயணி மீதும், டிரைவர் ஆட்சியப்பன் மீது பட்டதில், இருவருக்கும் சிறு காயம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து, இருவரும் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி பெற்றனர். பின்னர், டிரைவர் ஆட்சியப்பன் இது குறித்து, டவுன் போலீஸ் நிலைய த்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, பஸ் மீது கல் வீசி தாக்குதல் நடத்திய 2 மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • சங்கராபுரம் அருகே அரசு பஸ் கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்தனர்.
    • கல்வீசி பேருந்து கண்ணாடியை உடைத்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே புதுப்பட்டில் இருந்து சங்கராபுரம் நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சை வேலு என்பவர் ஓட்டினார். நடத்துநராக பாலகிருஷ்ணன் என்பவர் பணியில் இருந்தார்.

    இந்த பஸ் கிடங்கல் பாண்டலம் வழியாக சென்றபோது அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ் நிற்காமல் சென்றது. அப்போது அங்கு பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் ஆத்திரமடைந்தனர். பின்னர் அவர்கள் அந்த பஸ்சின் பின்பக்க கண்ணாடி மீது கல்வீசி உடைத்தனர்.

    தகவலின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தியதோடு, தொடர்ந்து கல்வீசி பேருந்து கண்ணாடியை உடைத்தவர்களை தேடி வருகின்றனர்.

    ×